ஒவ்வொரு நாளும் விடியும் தருணத்திலிருந்து சவால்களும் தொடங்கி விடுகிறது. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் தொடங்கி வருவாய் ஈட்டும் நபர் வீட்டிலிருந்து வெளியே புறப்படும் தருணம் வரை விவரிக்க முடியாத பல சவால்கள் இருக்கும்.
இந்த சவால்களில் வெல்ல வேண்டும் என்றால் தங்கு தடையில்லாமல் பொருளாதார நிலை வேண்டும். அதனை உருவாக்குவதற்கு கடினமாக உழைக்கிறோம். ஆனாலும் சங்கடங்களும் ,அசௌகரியங்களும் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.
இதற்கு ஒரு தீர்வு இல்லையா !? என மனதால் நினைப்பவர்களுக்கு எம்முடைய ஆன்மீகம் முன்னோர்கள் ஒரு பிரத்யேகமான வழிபாட்டை மேற்கொண்டால்.. சுபமான பலன் கிடைக்கும் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அதுதான் மகா கணபதி வழிபாடு..!? அதிலும் சங்கடகர சதுர்த்தி தினத்தன்று மேற்கொள்ள வேண்டிய பிரத்யேக வழிபாடு.
இதற்கு தேவையான பொருட்கள்: அருகம் புல் - மாசி இலை- நாயுருவி இலை - விஷ்ணு கந்தி இலை- மரு இலை - வன்னி மர இலை - அரளி இலை- இலந்தை மர இலை- கரிசலாங்கண்ணி இலை- தேவதாரு மர இலை - மா இலை- அத்தி இலை- மல்லிகை பூ இலை -பிரம்ம கிரந்தி இலை - அரச இலை - எருக்கம் பூ இலை.
மேலே குறிப்பிடப்பட்ட பதினாறு இலைகளும் எங்கு கிடைக்கும் என்பதனை தேடி கண்டறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பௌர்ணமிக்கு அடுத்த நான்காவது நாளாக வரும் சங்கடகர சதுர்த்தி தினத்தன்று இந்த பிரார்த்தனையை தொடங்க வேண்டும்.
முதலில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று மகா கணபதியை வழிபட்டு, சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். அதாவது கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
முதல் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயக பெருமானுக்கு அருகம்புல் - மாசி இலை - நாயுருவி இலை- விஷ்ணு கந்தி இலை - ஆகிய நான்கு இலைகளை வாங்கி எடுத்துச் சென்று அங்குள்ள சிவாச்சாரியாரிடம் கொடுத்து விநாயக பெருமானுக்கு உங்களது பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து நான்கு சங்கடகர சதுர்த்திகளில் இத்தகைய பிரத்யேக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இரண்டாவது சங்கடகர சதுர்த்தி தினத்தன்று மரு இலை- வன்னி மர இலை - அரளி இலை- இலந்தை இலை- ஆகிய நான்கு இலைகளை எடுத்துச் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும்.
மூன்றாவது மாதத்தில் வரும் சங்கடகர சதுர்த்தி தினத்தன்று விநாயக பெருமானுக்கு கரிசலாங்கண்ணி இலை - தேவதாரு இலை- மா இலை -அத்தி இலை -ஆகிய நான்கு இலைகளால் அர்ச்சிக்க வேண்டும்.
நான்காவது மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகப் பெருமானுக்கு மல்லிகைப்பூ இலை- பிரம்ம கிரந்தி இலை- எருக்கம் பூ இலை- அரச மர இலை - ஆகிய நான்கு இலைகளால் அர்ச்சிக்க வேண்டும்.
இப்படி நான்கு மாதங்களில் தொடர்ச்சியாக வரும் சங்கடகர சதுர்த்தி தினத்தன்று தவறாமல் விநாயகப் பெருமானுக்கு மேலே குறிப்பிடப்பட்ட பதினாறு இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்து அவருக்கு பிடித்த கொழுக்கட்டையை நிவேதனமாக படைத்து பிரார்த்தித்தால் உங்களது கோரிக்கை நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM