இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக இலங்கையணியின் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அனில் கும்ளே தனது பதவியிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை இராஜினாமா செய்திருந்த நிலையிலேயே அந்தப் பதவிக்கு மஹேல ஜெயவர்த“தன நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இவ்வாறு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தநிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இதற்கான பதிலை தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
“ இந்திய பயிற்சியாளராக என்னை இணைக்கும் ஊகங்களால் நான் உற்சாகமடைந்தேன், ஆனால் இப்போதைக்கு முழுநேர பதவிகளை நான் பார்க்கவில்லை.“ “ நான் தற்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் குல்னா ரைடஸுடன் முழுக் கவனத்தையும் செலுத்துகிறேன் என பதிலளித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அணிக்கு பயிற்சியளிப்பதற்கு மஹேல ஜயவர்தனவால் தற்போதைக்கு முடியாது என்றும், தேசிய அணியொன்றுக்கு பயிற்சியாளராவதற்கு அவருக்கு வயது போதாது என்றும் அதேபோல் அவருடன் விளையடிய வீரர்கள் இன்னும் இலங்கை அணியில் விளையாடி வருவதால் அவரை உடனடியாக பயிற்சியாளராக்க முடியாது. அதற்கு இன்னும் சில காலம் செல்ல வேண் டும் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM