பாகற்காய்
பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கல்சியமும் இரும்புச்சத்தும் போதுமான அளவு பீட்டாகரோட்டினும் உள்ளன. பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
மஞ்சள்
மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது. கணையத்தில் உள்ள திசுவினுள் ‘மெக்ரோபேஜ்’ (Macrophage) எனும் தற்காப்பு செல்கள் நுழைந்து, ‘சைட்டோகைன்ஸ்’ என்ற அழற்சியை உருவாக்கும் புரதத்தைச் சுரப்பதால் இன்சுலினை உற்பத்திசெய்யும் செல்கள் சேதமடைகின்றன. குர்குமின் இதைத் தடுத்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால், இரண்டாவது வகை நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள்
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்கள், இரைப்பை, சிறுகுடலில் கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்படுவதன் வேகத்தைக் குறைக்கின்றது. இதனால், உடலில் அதிக அளவு சீனி மற்றும் கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள சீனியின் அளவு குறைகிறது.
எனவே, நார்ச்சத்து நிறைந்த கீரைகள், பச்சை நிற காய்கறிகள், பூண்டு, கெரட், வெள்ளரி, புரோகோலி, தக்காளி, போஞ்சி, வெண்டிக்காய், கோலிஃபிளவர், அப்பிள், தோடம்பழம், பப்பாளி, எலுமிச்சை, நாவல்பழம், கொய்யா ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம்.
பட்டை
பட்டை, வளர்சிதை மாற்றத்தின் மூலமாக உடலில் வெப்பத்தை உருவாக்கும். இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைகிறது. பட்டை நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். இரண்டாவது வகை நீரிழிவு நோயாளிகள் பட்டையை உட்கொண்டால், இரத்தத்தில் சீனியின் அளவை சமநிலைப்படுத்தும்.
நட்ஸ்
நட்ஸில், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், விட்டமின்கள், தாது உப்புக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இதில் உள்ள நல்ல கொழுப்பு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றிவிடுவதால், உடலில் நல்ல கொழுப்பு நிறைந்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இன்சுலின் சுரப்பும் சீராகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் நிறைந்த பழங்களான எலுமிச்சை, தோடம்பழம், லெமன் போன்றவற்றில், விட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. இது, நீரிழிவு நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள காயம் விரைவில் ஆற உதவுகிறது.
எலும்பு முறிவுகள் விரைவில் குணமாகும். நோய்த் தொற்றைத் தடுக்கும். உடல் அசதியைக் குறைத்து, உடலுக்குத் தேவையான புத்துணர்வைத் தரும்.
வெந்தயம்
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாச்சத்து போன்றவைகள் உள்ளன. நீரிழிவு நோயாளர்கள் தினமும் இந்த வெந்தய தூளை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் நீரிழிவு நோய் கட்டுபாட்டில் இருக்கும்.
இவற்றில் இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயமின், நிகோட்டின் அமிலங்களும் நிறைந்துள்ளன. அவை உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், உடலை சமநிலையில் வைக்கவும் வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயத்தில் உள்ள விட்டமின் ‘ஏ’ நீரிழிவு நோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்கிறது.
நாவல் பழம்
நாவல் பழத்தில் கல்சியம், பொஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் ‘பி’ போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
நாவல் பழ விதைகளை சிறிதாக வெட்டி, தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவர நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM