இந்தியா தமிழ்நாடு ஆளுநர் விருதைப் பெற்றுக் கொண்ட சொற்பொழிவாளர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் சந்நிதியான், ஆசிரம கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளாலும், ஆசிரம தொண்டர்களாலும், பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை ஆசிரம சுவாமி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது ஆசிரமத்தினர் சார்பில் பாராட்டுரையை சொல்லின் செல்வர் இரா.செல்வ வடிவேல் நிகழ்த்தினார்.
ஆசிரம சுவாமி நினைவுச் சின்னம் கையளித்தார். ஆசிரமத் தொண்டர்களும் அடியவர்களும் லலீசனை பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் கௌரவித்தனர்.
சொற்பொழிவாளர் லலீசன் 1998ஆம் ஆண்டு பலாலி ஆசிரிய கலாசாலை மாணவனாக சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு சந்நிதியான் ஆசிரமத்தில் முதன் முதலாக பொது வெளியில் தனது சொற்பொழிவை ஆரம்பித்து, இன்று இந்த உயர் நிலையை அடைந்துள்ளார் என்று ஆசிரம சுவாமிகள் இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.
மேலும், தொண்டைமானாறு சந்நிதியான் ஆசிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில், ஆசிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில், ஆசிரமத்தின் வாராந்த நிகழ்வும் அருளுரையும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில், ஆன்மீக அருளுரையாக, மகாபாரத சொற்பொழிவு இடம்பெற்றது. ஆசிரியர் இரா.செல்வவடிவேல் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
உதவித் திட்டமாக, கெருடாவில் தெற்கு, தொண்டைமானாற்றை சேர்ந்த இளந்துளிர் அமையத்தின் கோரிக்கைக்கு அமைவாக, சித்திரை வருட நிகழ்வுக்காக 30 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM