இந்தியாவில் இடிந்து விழுந்த மாடிக் கட்டிடம் : 4 பேர் உயிரிழப்பு

19 Apr, 2025 | 11:09 AM
image

இந்தியாவில் 4 மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்து சம்பவம் சனிக்கிழமை (19) அதிகாலை டில்லியிலுள்ள முஸ்தபாபாத் நகரில் இடம்பெற்றுள்ளது.  

கட்டிட இடிபாடுகளில் இருந்தவர்களில் இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டில்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்ட நிலையில்,கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர்.

இதேவேளை, இடிந்து விழுந்த கட்டிடத்தில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகளும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கியில் நடக்கும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில்...

2025-05-15 16:52:20
news-image

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி...

2025-05-15 16:08:47
news-image

'உங்களால் உதவமுடியுமா? நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம்"...

2025-05-15 13:43:54
news-image

மெக்சிகோவில் விபத்து ; 21 பேர்...

2025-05-15 10:57:56
news-image

மெக்சிக்கோவில் பிரபல அழகி சுட்டுக்கொலை ;...

2025-05-15 10:40:05
news-image

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப்...

2025-05-14 16:26:48
news-image

இஸ்ரேலுடன் சிரியா சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும்...

2025-05-14 16:22:25
news-image

சீனாவின் க்ளோபல் டைம்ஸ் துருக்கியின் டிஆர்டி...

2025-05-14 15:24:16
news-image

கனடா வெளியுறவு அமைச்சரான தமிழக பெண்...

2025-05-14 12:43:04
news-image

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: 9...

2025-05-14 11:39:30
news-image

அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில்...

2025-05-14 11:38:16
news-image

கிரேக்கத்தில் நிலநடுக்கம் : இஸ்ரேல், லெபனான்,...

2025-05-14 10:07:01