இந்தியாவில் 4 மாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து சம்பவம் சனிக்கிழமை (19) அதிகாலை டில்லியிலுள்ள முஸ்தபாபாத் நகரில் இடம்பெற்றுள்ளது.
கட்டிட இடிபாடுகளில் இருந்தவர்களில் இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டில்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்ட நிலையில்,கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர்.
இதேவேளை, இடிந்து விழுந்த கட்டிடத்தில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகளும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM