இலங்கை அணிக்கு பயிற்சியளிப்பதற்கு மஹேல ஜயவர்தனவால் தற்போதைக்கு முடியாது என்றும், தேசிய அணியொன்றுக்கு பயிற்சியாளராவதற்கு அவருக்கு வயது போதாது என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
அதேபோல் அவருடன் விளையடிய வீரர்கள் இன்னும் இலங்கை அணியில் விளையாடி வருவதால் அவரை உடனடியாக பயிற்சியாளராக்க முடியாது. அதற்கு இன்னும் சில காலம் செல்ல வேண் டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தென்னாபிரிக்காவை சேர்ந்த கிரஹம் போர்ட் அந்த பொறுப்பிலிருந்து நேற்றுமுன்தினம் விலகினார். 56 வயதான கிரஹம் போர்ட் ஏற்கனவே 2012-ஆம் ஆண்டு முதல் 2014ஆ-ம் ஆண்டு வரை இலங்கை அணியின் பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார்.
பிறகு கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆ-வது முறையாக இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
2019ஆ-ம் ஆண்டு உலகக் கிண் ணம் வரை அவர் பயிற்சியாளராக தொடர்வார் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது பயிற்சியின் கீழ் இலங்கை அணி பெரிய அளவில் சாதிக்கவில்லை.
முதல் முறையாக பங்களாதேஷுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை தழுவியது. அண்மையில் சம்பியன்ஸ் கிண்ணத்தில் முதல் சுற்றுடன் வெளியேறியது.
இதனால் அதிருப்திக்குள்ளான இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பரஸ்பரம் அடிப்படையில் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே அவருக்கு வயது குறைவு. அதனால் இப்போதைக்கு இலங்கை அணியின் பயிற்சியாளராக அவரை நியமிக்க முடியாது என்று திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
அதேவேளை இரண்டு பேருடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் வெகு விரையில் இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்றும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள சிம்பாப்வே அணிக்கெதிரான தொடருக்கு, தற்போதைய களத்தடுப்பு பயிற்சியாளரான நிக் போத்தஸ், இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக செயற்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM