(நெவில் அன்தனி)
ஆசிய றக்பி எமிரேட்ஸ் தொடரின் முதலாம் பிரிவுக்கான தரமுயர்வு றக்பி போட்டியில் இலங்கையும் மலேசியாவும் மோதவுள்ளன.
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இப் போட்டி சனிக்கிழமை (19) மாலை நடைபெறவுள்ளது.
ஆசிய றக்பி பேரவையின் அனுமதியுடன் இப் போட்டியை தகுதிவாய்ந்த அதிகாரி விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ரெயார் அட்மிரல் ஓய்வுநிலை ஷேர்மால் பெர்னாண்டோ தலைமையிலான இலங்கை றக்பி நிருவாகக் குழுவினர் முன்னின்று நடத்துகின்றனர்.
இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி தரமுயர்வு பெற்று 2027 றக்பி உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றில் விளையாட தகுதிபெறும் என்பதால் இலங்கையும் மலேசியாவும் ஒன்றையொன்று வீழ்த்த கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக றக்பி தரவரிசையில் இலங்கை 40ஆவது இடத்திலும் மலேசியா 50ஆவது இடத்திலும் இருக்கின்றன.
இந்த இரண்டு அணிகளும் கடைசியாக 2019இல் அணிக்கு 15 பேருக்கான றக்பி போட்டியில் சந்தித்துக்கொண்டபோது 31 - 26 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மலேசியா வெற்றி பெற்றிருந்தது. அதற்கு முன்னர் 2017இலும் 22 - 9 என மலேசியா வெற்றிபெற்றிருந்தது.
மலேசிய அணியில் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட வெளிநாட்டவர்கள் மூவர் விளையாடவுள்ளதாக அறியக் கிடைக்கிறது. இது இலங்கைக்கு பெரும் சவாலாக இருக்கப்போகிறது.
எவ்வாறாயினும் உள்ளூர் லீக் மற்றும் நொக் அவுட் றக்பி போட்டிகளில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் 23 வீரர்கள் இறுதி குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர். இதன் மூலம் தீர்மானம் மிக்க போட்டியில் மலேசியாவை வெற்றிகொள்ள இலங்கை முயற்சிக்கும் என நம்பப்படுகிறது.
லீக் மற்றும் நொக் அவுட் போட்டிகளில் கண்டி கழகம் சம்பியனானதைத் தொடர்ந்து கழக மட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற கண்டி கழக வீரர் நைஜல் ரத்வத்தே கடைசி நேரத்தில் குழாத்தில் இணைக்கப்பட்டு அணித் தலைமைப் பதவியும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை முன்னோடி குழாத்தில் இடம்பெற்ற பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்ததன் காரணமாகவே நைஜல் ரத்வத்தே குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
இலங்கை குழாம்
நைஜல் ரத்வத்தே (தலைவர்), ஜனிது பெர்னாண்டோ, புலஸ்தி திசாநாயக்க, செனுர பெரேரா, நவீன் மாரசிங்க, திலின பண்டார, நிஸ்ரான் நிலார், தரிந்து சத்துரங்க, லசித்து கருணாதிலக்க, ஹேஷான் ஜென்சன், ஜனிது டில்ஷான், ஆகாஷ் மதுஷன்க, தனுஷ்க ரஞ்சன், டினால் ஏக்கநாயக்க, முர்ஷீத் ஸுபைர், விமுக்தி கமகே, நிரோஷ் பெரேரா, மொஹமத் ரிபான், தேனுக்க நாணயக்கார, பசிந்து பண்டார, தனுஜ ஜயவீர, தஹான் விக்ரமஆராச்சி, வெனுர கோதாகொட
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM