(நெவில் அன்தனி)
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் நடைபெறவுள்ள இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 2 போட்டிகளுக்கான 19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாத்தில் யாழ். சென். ஜோன்ஸ் வீரர் குகதாஸ் மாதுளன், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் கடந்த வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியிலும் வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன் விளையாடியிருந்தார். லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் மாதுளன் 4 போட்டிகளில் 4 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார்.
இதேவேளை, பங்களாதேஷுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியில் சுழல்பந்துவீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பெற்றிருந்தார்.
பாடாசலைகள் கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் ஆகாஷுக்கு 19 வயதுக்குட்பட்ட அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
15 வீரர்களைக் கொண்ட 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக றோயல் கல்லூரி வீரர் விமத் தின்சார நியமிக்கப்பட்டுள்ளார்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம்
விமத் தின்சார (தலைவர் - றோயல்), துல்னித் சிகேரா (மஹாநான), திமன்த மஹாவித்தான (திரித்துவம்), விரான் சமுதித்த (புனித சர்வேஷஸ்), கவிஜ கமகே (கிங்ஸ்வூட்), கித்ம விதானபத்திரன (ஆனந்த), ரமிரு பெரேரா (றோயல்), தினுர தம்சித் (குருகுல), சாமிக்க ஹீனட்டிகல (மஹாநாம), ரசித் நிம்சார (வத்தளை லைசியம்), குகதாஸ் மாதுளன் (யாழ். சென். ஜோன்ஸ்), விக்னேஸ்வரன் ஆகாஷ் (பருத்தித்துறை ஹாட்லி), தருஷ நவோத்ய (கொழும்பு ஸாஹிரா), சஞ்சு நிந்துவர (புனித ஆனாள்)
இளையோர் சர்வதேச ஒருநாள் தொடரில் ஆறு போட்டிகள்
இலங்கை இளையோர் அணிக்கும் பங்களாதேஷ் இளையோர் அணிக்கும் இடையிலான முதல் இரண்டு இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சிசிசி மைதானத்தில் ஏப்ரல் 26ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து கோல்ட்ஸ் மைதானத்தில் 3ஆவது போட்டி ஏப்ரல் 30ஆம் திகதியும் சிசிசி மைதானத்தில் 4ஆவது போட்டி மே 3ஆம் திகதியும் எஸ்எஸ்சி மைதானத்தில் 5ஆவது போட்டி மே 5ஆம் திகதியம் கோல்ட்ஸ் மைதானத்தில் 6ஆவது போட்டி மே 8ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM