எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் மனிதர்களாக இந்த பூவுலகில் பிறந்திருக்கும் அனைவரும் இறை வணக்கத்தில் ஈடுபடும்போது தீப வழிபாட்டை தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இந்த தருணத்தில் எம்மில் பலரும் வாழ்வாதாரத்திற்காக புதிய விடயத்தை அல்லது புதிய மாற்றத்தை துல்லியமாக அவதானித்திருப்பார்கள் அல்லது கண்டுபிடித்திருப்பார்கள்.
இதனை நடைமுறைப்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் நினைப்பர். ஆனால் இதற்கு எதிர்பாராத பக்கங்களில் இருந்து மறைமுக தடைகளும் , நேர்முகமான தடைகளும் ஏற்படக்கூடும்.
இதனால் தாங்கள் நினைத்தது நிறைவேறுவதில் தாமதங்கள் ஏற்படும். இதனால் பலரும் உளவியல் ரீதியாக வலிமை இழந்து தவிப்பர். இத்தகைய தருணங்களில் நினைத்ததில் வெற்றி பெறுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் நாளாந்த சூட்சம வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : பதினொரு நெய் தீபங்கள்.
நாளாந்தம் மதிய உணவை பசியாறிய பிறகு அதற்கு பின் எந்த உணவையும் பசியாறாமல் இரவு 9 மணி வரை காத்திருக்க வேண்டும்.
இரவு எட்டு மணி அளவில் உங்களுடைய பூஜை அறையில் இந்த 11 நெய் தீபத்தையும் ஏற்றி, உங்கள் மனதிற்கு பிடித்த இஷ்ட தெய்வ மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
இந்த தருணத்தில் உங்களுடைய மனதில் ஒற்றை கோரிக்கையை ஏற்படுத்திக் கொண்டு அதனை இந்த பிரபஞ்சத்திடம் கோரிக்கையாக சமர்ப்பணம் செய்யுங்கள்.
இந்தப் பிரார்த்தனையை தொடர்ந்து 48 நாட்கள் இடைவிடாமல், நாளாந்தம் இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள்.. 11 நெய் தீபங்களை ஏற்றி இறைவனின் திருநாமத்தை உச்சரித்து வந்தால் உங்களுடைய எண்ணம் ஈடேறும்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM