பளபளப்பான முகத்துக்கு இயற்கை வழி டிப்ஸ்

18 Apr, 2025 | 05:44 PM
image

  • தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூள் கலந்து குழைத்து, அதை வெதுவெதுப்பாகச் சுடவைத்துத் தினமும் குளிப்பதற்கு முன் கண்களைச் சுற்றி பூசி, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் கருவளையம் காணாமல் போய்விடும்.
  • பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊறவைத்து காலையில் மைய அரைத்து முகத்தில் தேய்த்து வர, முகம் சிகப்பழகு பெறும்.
  • எலுமிச்சம்பழச் சாறில் பாசிப்பயறு மா கலந்து முகத்தில் தடவி, ஒருமணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் நல்ல நிறம் பெறும்.
  • அப்பிள் பழத்தை வெட்டி, தேனில் ஊற வைத்துச் சாப்பிட்டால், கண்கள் நல்ல அழகு பெறும்.
  • உதட்டில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பு சிறிதளவு பவுடரைத் தேய்த்துவிட்டுப் பின்னர் போட்டால் அதிக நேரம் லிப்ஸ்டிக் அழியாமல் இருக்கும்.
  • இரண்டு தேக்கரண்டி அரிசி மா, இரண்டு தேக்கரண்டி தயிர் இவற்றைக் கலந்து இரவில் முகத்தில் தேய்த்துவிட்டுப் பின்பு நன்றாகக் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், பகலில் போட்ட மேக்கப் சுத்தமாக நீங்கி, முகம் இயல்பான நிலைக்கு வந்துவிடும்.
  • தினமும் சுத்தமான ஆமணக்கு எண்ணெயைப் புருவங்களில் தேய்த்தால் புருவமுடி கறுப்பாகவும், கவர்ச்சியாகவும் தோன்றும்.
  • பால் ஏட்டில் சில துளிகள் எலுமிச்சம் பழச் சாறு கலந்து குழைத்து முகத்தில் தடவிக்கொண்டு, உலர்ந்ததும் கழுவ வேண்டும். சில நாட்கள் தொடர்ந்து இப்படிச் செய்தால் முகம் பளபளக்கும்.
  • முகம் பளபளப்பாக குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதை பஞ்சில் தொட்டு முகத்தில் பூசி அரைமணிநேரம் சென்றதும் முகத்தைக் கழுவி விடுங்கள். தினமும் இப்படிச் செய்தால் நாளடைவில் முகம் பளிச்சிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்