இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சனுக்கு, ஜோகன்னஸ்பர்க்கில் தர்மசங்கடமான தீர்ப்பை நடுவரிடம் இருந்து பெற வேண்டியதாயிற்று.
பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசிய பின்னர் இரண்டு அல்லது மூன்று அடிகள் ஆடுகளத்தில் வைப்பார்கள். அப்படி அவர்களது காலடி குறிப்பிட்ட தூரத்திற்கு அதிகமாக செல்லக்கூடாது. கிரிக்கெட்டில் மூன்று ஸ்டம்பிற்கு நேராக உள்ள அந்த இடம் அபாயகரமான இடம் (Danger Area) என்று அழைக்கப்படும்.
ஒரு பந்து வீச்சாளர் அப்படி அபாயகரமான இடத்தில் கால் வைத்தால் நடுவர் எச்சரிப்பார். பின்னர் பந்து வீச்சாளர்கள் அதை சரி செய்து கொள்வார்கள். ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3ஆ-வது டெஸ்டில் ஜேம்ஸ் அண்டர்சன் 61ஆ-வது ஓவரை வீசும்போது அபாயகரமான இடத்தில் கால் வைத்தார். இதனால் நடுவர் அவரை எச்சரித்தார். அதன்பின் 94-ஆவது ஓவரில் மீண்டும் அதேபோல் சம்பவம் நிகழ்ந்தது. அப்போதும் நடுவர் அவரை எச்சரித்தார்.
அதன்பின் 100ஆ-வது ஓவரின் 2ஆ-வது பந்தையும் வீசிய பின்னர் இதுபோல் சம்பவம் நிகழ்ந்தது. இதனால் நடுவர் அவரை பந்துவீச அனுமதிக்கவில்லை. இதனால் அவருக்குப்பதிலாக பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரை நிறைவு செய்ய வந்தார்.
முதல் இன்னிங்ஸில் தடை செய்யப்பட் டாலும் 2-ஆவது இன்னிங் ஸில் அண்டர்சன் பந்து வீச அனுமதிக்கப்பட் டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM