(நமது நிருபர்)
16 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்ரீ தலதா வழிபாடு வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமாகவுள்ளது. ஆரம்ப நிகழ்வு இன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஆரம்பமாவதுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் கலந்துக்கொள்ளவுள்ளார்.
மேலும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளவுள்ளதுடன், அவர்கள் கொழும்பில் இருந்து விசேட புகையிரதம் ஊடாக கண்டி செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் அனுசரணையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்ரீ தலதா வழிபாடு வெள்ளிக்கிழமை (18) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) வரை 10 நாட்களுக்கு நடைபெறும்.
ஆரம்ப நாளான இன்று பிற்பகல் 3 மணிமுதல் மாலை 5 மணிவரையிலும் பக்தர்களுக்கு 'ஸ்ரீ தலதா' புனித தந்ததாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன், சனிக்கிழமை (19) முதல் தினசரி பிற்பகல் 12 மணிமுதல் மாலை 5 மணிவரை புனித தந்ததாதுவை வழிபட அனுமதியளிக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM