''அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் கடைசி வரை என் கதாபாத்திரத்தை பற்றி முழு விவரங்களும் புரியாமல் தான் நடித்தேன்'' என அப்படத்தில் நடித்த நடிகர் பிரசன்னா தெரிவித்திருக்கிறார்.
அஜித் குமார் நடித்த ' குட் பேட் அக்லி ' படம் வெளியாகி ஒரு வார காலத்திற்குள் தமிழகத்தில் நூறு கோடி ரூபாய்க்கு மேலும், உலகம் முழுவதும் 170 கோடி ரூபாய்க்கு மேலும் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இதனை கொண்டாடும் வகையில் சென்னையில் படத்தை வெற்றி பெற செய்த இரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி - வை. ரவிசங்கர், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமார், நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, பிரசன்னா, பிரியா பிரகாஷ் வாரியர், அர்ஜுன் தாஸ், கார்த்திக்கேய தேவ், கே ஜி எஃப் அவினாஷ், நடன இயக்குர்கள் அசார் - கல்யாண், சண்டை பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர், ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம், படத்தொகுப்பாளர் விஜய் வேலு குட்டி ஆகியோர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் நடிகர் பிரசன்னா பேசுகையில், ''அஜித் சாரின் நடிப்பை பார்த்து தான் திரையுலகில் நடிகராக அறிமுகமானேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய வாழ்நாள் கனவு. 'மங்கத்தா' படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் இணைந்து பணியாற்ற முடியவில்லை. அதன் பிறகு இந்தப் படத்தில் இணைந்திருக்கிறேன். இதில் வாய்ப்பு கிடைத்தவுடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றபோது அஜித் என்னை கட்டிப்பிடித்து உற்சாகமாக வரவேற்றார். என் வாழ்நாள் கனவு நிறைவேறியது. இப்படத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் உருவாக்கம் என்பது வித்தியாசமாக இருந்தது. அவருடைய பட உருவாக்கம் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. கடைசி வரை புரியாமல் தான் இப்படத்தில் நடித்தேன். இந்த படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM