வடக்கில் கடந்த காலங்களில் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
76வருடங்களாக காணப்பட்ட சபக்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து மாற்றத்தினை ஏற்படுத்திய இந்த நாட்டு மக்கள் உலகத்துக்கே முன்னுதாரணமாக உள்ளனர்.
இதுகால வரையிலும் ராஜபக்ஷக்களுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஆதரவாகச் செயற்பட்டு அவர்களது காலடியில் இருந்தவர்கள் ஆட்சியைப் பொறுப்பெடுத்து ஆறுமாதங்களைப் பூர்த்தி செய்த எம்மைப்பார்த்து என்ன செய்துவிட்டீகள் என்று கேள்வி எழுப்புகின்றார்கள்.
குறிப்பாக, 2015 முதல் 2019 வரையில் ரணில் விக்கிரமசிங்கவின் காலடியில் இருந்தவர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இவர்கள் தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியைப் பார்த்து அச்சமடைந்து எம்மை இனவாதிகள் என்கின்றார்கள்.
ரணில் விக்கிரமசிங்க யார், அவருடன் இருந்தவர்கள் யார் என்பதை யாழ்ப்பாண மக்களுக்கு புதிதாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. யாழ்;.நூலகத்தை எரித்து, அதனை வேடிக்கை பார்த்து மகிழ்ந்தவர்களுடன் இருக்கின்றபோது அவர்கள் இனவாதிகளாக தெரியவில்லையா என்ற கேள்வி உள்ளது.
ராஜபக்ஷக்கள் ஒவ்வொருவராக சிறைச்சாலையை நோக்கி நகருகின்றார்கள். அதுமட்டுமன்றி ராஜபக்ஷக்களுடன் இணைந்து இலஞ்ச, ஊழல்களில் ஈடுபட்ட அனைவரின் விலாசமும் மகசின் சிறைச்சாலையாக மாற்றப்படுவது தவிர்க்க முடியாதவொரு விடயமாகும்.
அதேநேரம், வெறுமனே தென்னிலங்கை தலைவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றதே வடக்கில் உள்ளவர்கள் மீது நடவடிக்கைள் எடுக்கப்பட மாட்டதா என்று மக்கள் எம்மிடத்தில் கேள்வி கேட்கிறார்கள்.
மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள், ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள், பிரஜைகளை கடத்தி காணாமலாக்கியவர்கள் என்று யாழ்ப்பாணத்திலும் உள்ளார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கைகளை நாம் எடுப்போம். எமக்கு யாருடனும் பகைமை கிடையாது. அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டிய நோக்கமும் கிடையாது. ஆனால் நீதியை நிலை நாட்டுவதும் மக்கள் ஆட்சியை உறுதிப்படுத்துவதும் எமது கடமையாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM