பொய், ஏமாற்று அரசியலுக்கு அதிக ஆயுட்காலம் இல்லை - சஜித் பிரேமதாச

Published By: Vishnu

17 Apr, 2025 | 08:32 PM
image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திசைகாட்டிக்கு அதிகாரம் கிடைக்காத சபைகளுக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என கூறி மக்களை ஏமாற்றி வருகின்றார். பொய், ஏமாற்று அடிப்படையிலான அரசியலுக்கு அதிக ஆயுட்காலம் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொலன்னறுவை தேர்தல் தொகுதியில் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இன்று எமது நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி அரசாங்கம் மக்களை ஏமாற்றி, தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறி நடந்து வருகிறது. ஒட்டுமொத்த  மக்களையும் ஏமாற்றி வருவதை மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர்.

விவசாயப் பகுதிகளில் அடுத்த போகத்துக்குரிய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. என்றபோதிலும் உர மானியம் இதுவரை அவர்களுக்கு கிடைக்கவில்லை. பயிர் சேதங்களுக்கு இழப்பீடுகளோ கிடைக்கவில்லை. யானை மனித மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களின் பயிர்கள், உடமைகள் மற்றும் உயிர் சேதங்களுக்கு இன்னும் இந்த அரசாங்கம் தீர்வு காணவில்லை.

இம்முறை உரங்களின் விலையும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் விவசாயிகளைப் பாதுகாப்போம், விவசாயியைக் கடவுளாகக் கருதுகிறோம் என்று கூறிய திசைகாட்டி தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியினர் ஒட்டுமொத்த விவசாய சமூகத்தினரையும் அழிக்கும் கொள்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று மக்கள் வாழ முடியாத அளவுக்கு பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. பொது மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று வேளை உணவு கூட சாப்பிட முடியாத நிலையை நாடு எட்டியுள்ளது. அத்தியாவசிய உணவு மற்றும் பாடசாலை பொருட்களுக்கான ஏயுவு வரிகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரிசி, பால் மா, தேங்காய், உப்பு ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி திசைகாட்டிக்கு அதிகாரம் கிடைக்காத சபைகளுக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என கூறி மக்களை ஏமாற்றி வருகின்றார். பொய், ஏமாற்று அடிப்படையிலான அரசியலுக்கு அதிக ஆயுட்காலம் இல்லை. மின்கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் என்று இந்த ஆளும் தரப்பினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறினர். மக்கள் எழுச்சியால் தான் 20 சதவீதம் கூட மின்கட்டணம் குறைக்கப்பட்டன. அரசாங்கம் தீர்மானம் எடுத்து இதனை நிறைவேற்றவில்லை.

மக்களின் கருத்துக்களுக்கு ஏற்பே இது குறைக்கப்பட்டது.  எஞ்சிய 13 சதவீத குறைப்பை இந்த அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும். எரிபொருள் விலைகள் தொடர்பில் அரசாங்கம் இவ்வாறான கொள்கைகளை பின்பற்றி வருகிறது. புதிய அரசாங்கத்தில் மக்கள் கண்ட பயன் எதுவும் இல்லை. பொய்களை கொண்டு மக்களை ஏமாற்றி வரும் இந்த அரசியலைக் கண்டு மக்கள் ஏமாந்து விடக் கூடாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஹரக் கட்டா'வின் சர்ச்சைக்குரிய கருத்து: பயங்கரவாத...

2025-05-16 03:30:34
news-image

மூதூர் இறால்குழியில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி...

2025-05-16 03:20:36
news-image

இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலை...

2025-05-16 03:18:47
news-image

ஏ.சி பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள்; ...

2025-05-16 03:12:11
news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில்...

2025-05-16 03:01:53
news-image

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன...

2025-05-16 02:54:30
news-image

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க...

2025-05-15 21:03:14
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து விரைவில்...

2025-05-15 21:03:32
news-image

சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்...

2025-05-15 21:01:14
news-image

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க...

2025-05-15 20:56:13
news-image

பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்...

2025-05-15 22:16:57
news-image

டிஜிட்டல் முறைமை ஊடாக ஊழலை ஒழிக்க...

2025-05-15 21:02:14