வீதிப்போக்குவரத்து விதி மீறல்களுக்கான தண்டப்பணத்தை டிஜிட்டல் தளத்தின் ஊடாக செலுத்தும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தபால் திணைக்களம் வருடாந்தம் 600 - 800 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொள்வதாக தபால் தொழிற்சங்கங்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
இப்புதிய டிஜிட்டல் தள முறைமையானது நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களின் தண்டப்பண வருமானத்தை முழுமையாக இல்லாமல் செய்திருப்பதாகவும் அத்தொழிற்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி தண்டப்பண அறவீட்டை நவீனமயப்படுத்தும் நோக்கில் தபால் திணைக்களத்தினால் குறுஞ்செய்தி மூலம் தகவல் வழங்கும் செயன்முறையொன்று ஏற்கனவே வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும், இருப்பினும் பொலிஸாரின் ஒத்துழைப்பின்மையினால் அது உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் தபால் தொழிற்சங்கங்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் தபால் திணைக்களம் தற்போது முகங்கொடுத்துவரும் நட்டம் திறைசேரியைப் பாதிக்கக்கூடும் என்பதால், டிஜிட்டல் தளத்தின் ஊடாக தண்டப்பணம் செலுத்தும் செயன்முறையை மீள்பரிசீலனை செய்யுமாறும், திணைக்களத்தின் குறுஞ்செய்தி தகவல் வழங்கல் செயன்முறையை நடைமுறைப்படுத்துமாறும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM