இப்போதெல்லாம் பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் முதுகுவலி என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அதிலும், சிசேரியன் செய்துகொண்ட பெண்களுக்கு, முதுகுவலி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று பலராலும் நம்பப்படுகின்றது..
குறிப்பாக, பிரசவத்தின் போது மரத்துப்போக போடப்படும் ஊசியால், முதுகுவலி ஏற்படும் என்பது பலரின் எண்ணம். இருப்பினும் இது தவறான எண்ணம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இதுகுறித்து தைவானில் 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆய்வில், சுகப்பிரசவம் நடந்த பெண்களுக்கு 31.5 சதவீதம் பேருக்கு முதுகுவலி ஏற்பட்டதாகவும், சிசேரியன் செய்த பெண்களுக்கு 31.8 சதவீதம் முதுகுவலி ஏற்பட்டதாகவும் 13 ஆண்டுகாலமாக நடைபெற்ற பிரசவங்களைக் கொண்டு, செய்யப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. ஆக… இதில் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் பெரிதாக இல்லை.
இருப்பினும், பிரசவத்துக்கு பின்னர், பெண்களுக்கு முதுகுவலி வருவதன் காரணம் என்னவென்று மருத்துவர்கள் கூறுவது இதுதான்…
அதாவது, பிரசவத்திற்கு முன்பு பெண்களுக்கு Relaxin என்ற ஹோர்மோன் சுரந்து இடுப்புப் பகுதியில் உள்ள தசைகள் மற்றும் தசைநார்களை ஓய்வில் வைத்துவிடுமாம். இது இயற்கையாகவே பிரசவ சமயங்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஒன்றாம்.
இதுபோன்ற சமயங்களில் தசைநார்கள் மிகவும் தளர்வான நிலையில் இருக்கும். அச்சமயம் தசைநார்களை சரியாக கவனித்துக் கொள்ளாமல் எடைத்தூக்குதல், குழந்தையை தூக்குவது, சரியான அமைப்பில் அமராதது, தாய்ப்பால் கொடுக்கும்போது சரியாக உட்காராமல் இருப்பது போன்ற காரணங்களால் தான் முதுகுவலி ஏற்படலாம் என்கின்றனர்.
மேலும், இந்த வலி முதுகுத்தண்டில் ஏற்படுவதில்லை என்றும், அதைச் சுற்றியுள்ள தசைகளில்தான் வலி ஏற்படுகிறது. அதுவும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் கடின வேலைகளின் காரணத்தாலேயே இத்தகைய வலி ஏற்படுகின்றது என்றும் தெரிவிக்கின்றார்கள்.
அதேசமயம், தற்போது பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு Postpartum Weight gain என்று சொல்லப்படும் பிரசவத்திற்கு பின்பு உடல் எடை அதிகரித்து விடுகிறது. பிரசவத்தின் முன்பு 50 கிலோ இருந்த பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு 80 கிலோவிற்கு மேல் எடைப்போட்டு விடுகிறார்கள்.
இதனால் அவர்கள் முதுகிற்கு கொடுக்கும் அழுத்தம் அதிகமாகி விடுகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் சுகப்பிரசவத்திலும் நடக்கும். சிசேரியனிலும் நடக்கும். எனவே, இதுபோன்ற முதுகுவலி ஏற்படாமல் இருக்க உடல் எடை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சரியான அமைப்பில் உட்காருவது, பால் கொடுப்பது போன்றவற்றை முறையாக செய்ய வேண்டும்“ என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
எனவே, பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் முதுகுவலிக்குக் காரணம் முதுகில் போடப்படும் ஊசி இல்லை. சரியான அமைப்பில் அமராதது, உடல் எடை அதிகரிப்பது, முதுகெலும்பில் சரியான பலம் இல்லாததே காரணமாகும் என்பதைப் புரிந்துக்கொண்டு ஆரோக்கியமாக உடலை பேணிக்காக்க வேண்டியது அவசியமாகும் என்றும் மருத்துவ வல்லுனர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
குறிப்பாக, பிரசவத்துக்குப் பின்னர், பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வு, உடல் புத்துணர்வு பெறுவதற்கான ஊட்டம், சரியான உடற்பயிற்சிகள் என மூன்றும் சேர்ந்தால்தான் அவர்களது உடல் பழைய நிலைக்குத் திரும்பும். இந்த விதி, சுகப்பிரசவம், சிசேரியன் என இரண்டுக்கும் பொருந்தும்.
வயிற்றைக் கிழித்துச் செய்யப்படுகிற ஓர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதிலிருந்து முழுமையாக குணமாக ஒருவர் எடுத்துக்கொள்ளும் நேரத்துக்கும், ஓய்வுக்கும், அதுவே சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு பெண் முழுமையாக குணமாக எடுத்துக் கொள்ளும் நேரம், ஓய்வுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும். ஏனெனில், பிரசவத்துக்குப் பிறகு குழந்தைக்கு கவனம் தேவைப்படும். குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருக்கும். தாயின் தூக்கம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.
எனவே, சிசேரியனுக்கு பிறகு முதல் மூன்று மாதங்களில் ஒரு பெண் தன்னை எந்த அளவுக்கு ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்கிறார் என்பதைப் பொறுத்துதான் பிற்காலத்தில் முதுகுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கும் என்பதை கவனத்திற் கொள்வது சிறந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM