பொய், ஏமாற்று அரசியலுக்கு அதிக ஆயுட்காலம் இல்லை! - சஜித் பிரேமதாச 

17 Apr, 2025 | 04:59 PM
image

பொய், ஏமாற்று அடிப்படையிலான அரசியலுக்கு அதிக ஆயுட்காலம் இல்லை. மின்கட்டணத்தை 33% குறைப்போம் என்று இந்த ஆளும் தரப்பினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறினர். மக்கள் எழுச்சியால் தான் 20% கூட மின்கட்டணம் குறைக்கப்பட்டன. அரசாங்கம் தீர்மானம் எடுத்து இதனை நிறைவேற்றவில்லை. மக்களின் கருத்துக்களுக்கு ஏற்பவே இது குறைக்கப்பட்டது.  எஞ்சிய 13% குறைப்பை இந்த அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிமித்தம் பொலன்னறுவை தேர்தல் தொகுதியில் இன்று வியாழக்கிழமை (17) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை  தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், 

இன்று எமது நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி அரசாங்கம் மக்களை ஏமாற்றி, தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறி நடந்து வருகிறது. 

ஒட்டுமொத்த 2.2 மில்லியன் மக்களையும் ஏமாற்றி வருவதை மக்கள் இன்று நன்கு உணர்ந்துள்ளனர். 

விவசாயப் பகுதிகளில் அடுத்த போகத்துக்குரிய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. என்றபோதிலும் உர மானியம் இதுவரை அவர்களுக்கு கிடைக்கவில்லை. பயிர் சேதங்களுக்கு இழப்பீடுகளோ கிடைக்கவில்லை. யானை மனித மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களின் பயிர்கள், உடமைகள் மற்றும் உயிர் சேதங்களுக்கு இன்னும் இந்த அரசாங்கம் தீர்வு காணவில்லை.

இம்முறை உரங்களின் விலையும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், விவசாயியை தூக்கி விடுவோம், விவசாயிகளைப் பாதுகாப்போம், விவசாயியைக் கடவுளாகக் கருதுகிறோம் என்று கூறிய திசைகாட்டி தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியினர் ஒட்டுமொத்த விவசாய சமூகத்தினரையும் அழிக்கும் கொள்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று மக்கள் வாழ முடியாத அளவுக்கு பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. பொருட்களின் விலைகள் தாறுமாறாக அதிகரித்துள்ளன. பொது மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளன. மூன்று வேளை உணவு கூட சாப்பிட முடியாத நிலையை நாடு எட்டியுள்ளது. அத்தியாவசிய உணவு மற்றும் பாடசாலை பொருட்களுக்கான VAT வரிகளும் விதிக்கப்பட்டுள்ளன. 

மேலும், அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. அரிசி, பால் மா, தேங்காய், உப்பு ஆகியவற்றின் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அவர்கள், திசைகாட்டிக்கு அதிகாரம் கிடைக்காத சபைகளுக்கு நிதி ஒதுக்க மாட்டோம் என கூறி மக்களை ஏமாற்றி வருகின்றார். 

பொய், ஏமாற்று அடிப்படையிலான அரசியலுக்கு அதிக ஆயுட்காலம் இல்லை. மின்கட்டணத்தை 33% குறைப்போம் என்று இந்த ஆளும் தரப்பினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறினர். மக்கள் எழுச்சியால் தான் 20% கூட மின்கட்டணம் குறைக்கப்பட்டன. அரசாங்கம் தீர்மானம் எடுத்து இதனை நிறைவேற்றவில்லை. மக்களின் கருத்துக்களுக்கு ஏற்பவே இது குறைக்கப்பட்டது.  எஞ்சிய 13% குறைப்பை இந்த அரசாங்கம் விரைந்து எடுக்க வேண்டும். எரிபொருள் விலைகள் தொடர்பில் அரசாங்கம் இவ்வாறான கொள்கைகளை பின்பற்றி வருகிறது. 

புதிய அரசாங்கத்தில் மக்கள் கண்ட பயன் எதுவும் இல்லை. சுத்த பொய்களை கொண்டு மக்களை ஏமாற்றி வரும் இந்த அரசியலைக் கண்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காணி உரித்தை நிரூபிப்பதற்கு இலவச சட்ட...

2025-05-21 17:38:31
news-image

மக்கள் மீண்டும் இனரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க...

2025-05-21 17:38:03
news-image

இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில்...

2025-05-21 16:50:29
news-image

இலங்கையிலிருந்து 4600க்கும் அதிகமான மருத்துவபணியாளர்கள் வெளியேறியுள்ளனர்...

2025-05-21 16:49:18
news-image

தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்துவதற்காக அரசாங்கம்...

2025-05-21 16:48:08
news-image

கெஹலியவின் மகனுக்கு விளக்கமறியல் !

2025-05-21 16:18:57
news-image

யாழ். பழைய பூங்கா வளாகத்தில் இனி...

2025-05-21 16:39:47
news-image

புகையிலை, மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு...

2025-05-21 16:05:53
news-image

மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு...

2025-05-21 16:07:35
news-image

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட...

2025-05-21 15:43:55
news-image

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில்...

2025-05-21 15:30:42
news-image

மன்னம்பிட்டி விபத்தில் 5 இராணுவ வீரர்கள்...

2025-05-21 15:21:36