(எம்.ஆர்.எம்.வசீம்)
இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த வேண்டுமென அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இதுதொடர்பில் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்கம் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் ‘இக்வொட்’ உறுப்பு நாடான இந்தியாவுடன் பாதுகாப்பு தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொள்ள எடுத்த தீர்மானம் குறித்து எமது கவலையையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒரு பக்கத்தில் அரசாங்கம் செய்துகொண்டுள்ள இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் நாட்டுக்குள் முறையான கலந்துரையாடல் அல்லது பாராளுமன்றத்தில் விவாதம் இல்லாமல் அனுமதித்துக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் நாட்டுக்குள் புதிய பணிப்போர் ஒன்றை மற்றும் இந்து சமுத்திரத்தில் இராணுவமயமாக்கும் சந்தர்ப்பத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின்போது இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் மாஷல் எச்.எஸ்.சம்பத் துய்யகொத்தா மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கை மாற்றப்பட்டது.
இந்திய ஊடகங்களுக்கமைய வலயத்தில் சீனாவின் இருப்புக்கு எதிராக போராடுதல் இந்தியாவின் உத்திகளின் ஒரு பகுதியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இந்தியாவின் பாதுகாப்புக்கு அதேபோன்று வலயத்தின் ஸ்திரத்தன்மைக்கு எந்த வகையிலும் பாதிப்பாக எமது பூமியை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிப்பதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் மோடிக்கு உறுதியளித்திருந்தார்.
இது தொடர்பில் எமக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. என்றாலும் வலயத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பில் இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடர்பில் கேள்வி எழுகிறது.
இந்தியா ‘இக்வொட்’ உறுப்பு நாடாக இருந்து, புதிய பணிப்போர் ஒன்றில் சீனாவை கட்டுப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகளுக்கு சம்பந்தப்பட்டிருக்கிறது. 2024இல் தற்போதைய ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ருபியோ, இந்தியாவுக்கு நேட்டோ உறுப்பினர்களுக்கு சமமான நிலையை வழங்குவதற்கானதொரு சட்டத்தை காங்கிரஸுக்கு சமர்ப்பித்திருந்தார்.
இந்த வருடம் பெப்ரவரி மாதம் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது தொழில்நுட்ப பரிமாற்றம், இரண்டு நாடுகளும் இணைந்து ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்காக இந்தியா மற்றும் அமெரிக்கா 10 வருட பாதுகாப்பு ஒத்துழைப்பு வரைபுக்கு வந்திருந்தது.
இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு சென்றுள்ளதன் மூலம் இலங்கை இந்தியாவின் காலனித்துவ அரசாங்கமாக பின்கதவு வழியாக க்வொடுக்கு இழுபட்டு செல்வதன் மூலம் உண்மையான அச்சுறுத்தல் இருக்கிறது. இலங்கை பல நூற்றாண்டு காலமாக பின்பற்றிவந்த பிளவுபடாத வெளிநாட்டுக் கொள்கையை தொடர்ந்தும் செயற்படுத்தும் என நம்ப முடியாமல் இருக்கிறது.
சீனா போன்ற இலங்கையின் பிரதான முதலீட்டாளர், சந்தை பங்காளி மற்றும் சர்வதேச நிறுவனங்களில் எமது சுயாதீனம் மற்றும் இறையாண்மைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடொன்றுக்கு இந்த ஒப்பந்தம் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை தற்போது எந்த வெளிநாட்டு தரப்புடனும் நேரடியாக சண்டைக்கு சம்பந்தப்படாத நிலையில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை.
இலங்கை, இறுதியாக கைச்சாத்திட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் ஐக்கிய அமெரிக்கா, இலங்கை (1947, 1957) பாதுகாப்பு ஒப்பந்தமாகும். அது இலங்கையின் இறையாண்மை மற்றும் சர்வதேச தொடர்புகளுக்கு ஆரோக்கியமற்ற புதிய காலனித்துவ விதிமுறைகளுக்கு ஆளாகியதுடன், அது பண்டாரநாயக்க அரசாங்கத்தின்போதே கலைக்கப்பட்டது.
இந்தியாவுடன் இருக்கும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்து சமுத்திரத்தை தொடர்ந்தும் இராணுவ மயமாக்குவதற்கான ஒரு நடவடிக்கையாக கருத முடியும் என்பதுடன் அது இரண்டு நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கிய இந்திய சமுத்திரத்தை சமாதான வலயமாக பிரகடனப்படுத்தும் ஐக்கிய நாடுகளின் முயற்சியை மீறும் செயலாகும்.
இந்த நிலைமையில் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் புதிய பணிப்போருக்கு எதிராக அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளும் ஐக்கிய முன்னணியாக அணி திரளவேண்டும் என்றும் கோருகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM