- ரோஸ் வோட்டர் என அழைக்கப்படும் பன்னீரை, ஒரு ஸ்பிரே போத்தலில் ஊற்றி வைத்துக் கொண்டு, அதை அவ்வப்போது முகத்தில் ஸ்பிரே செய்து, ஒரு பருத்தி துணியை வைத்து துடைத்தாலே போதும். முகம் எப்போதும் பொலிவாக இருக்கும்.
- ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி பன்னீர் இரண்டையும் ஒன்றாகக் கலந்து, பருத்தி துணியை அதில் நனைத்து, முகத்தில் போட்டு விடுங்கள். இரவு முழுவதும் உங்கள் முகத்தில் இது அப்படியே இருக்கட்டும் மறுநாள் காலை முகத்தை கழுவினால் முகம் ஜொலிப்பதைக் காணலாம்.
- ரோஜா இதழ்களை நன்கு காயவைத்து அதனை தூள் செய்து அதனுடன் பயற்றம் மா ஒரு தேக்கரண்டி, சிறிது பன்னீர் விட்டு நன்றாக கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் மாசு, மறு இன்றி அத்தனை அழகாக காட்சியளிக்கும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதும்.
- முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க காலை, இரவு இரண்டு வேளையும் பன்னீரை முகத்தில் தேய்த்து வந்தாலே போதும். முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும்.
- பன்னீர் ஒரு தேக்கரண்டி, கிராம்புத்தூள் ஒரு தேக்கரண்டி இரண்டையும் ஒன்றாகக் கலந்து, முகத்தில் உள்ள முகப்பருக்களின் மேல் இரவு தூங்கும் முன் வைத்து விடுங்கள். இரவு அப்படியே இருக்கட்டும். அடுத்த நாள் காலை முகத்தை கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் மறைந்து விடும்.
- மேக்கப் போடுவதற்கு மட்டுமல்லாமல் போட்ட மேக்கப்பை நீக்குவதற்கும் பன்னீரை உபயோகிக்கலாம். ஒரு மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன் ஒரு மேசைக்கரண்டி பன்னீர் கலந்து, மேக்கப் போட்ட முகத்தின் மீது தடவி, அதன் பிறகு சுத்தம் செய்தால், போட்ட மேக் அப் விரைவில் அழிவதுடன் முகத்திற்கு ஒரு மிருதுவான தன்மையும் கிடைக்கும்.
- பன்னீருடன், இரண்டு கற்பூரத்தை தூள் செய்து போட்டு அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தில் ஒரு பருத்தி துணி வைத்து ஒற்றி எடுத்த பிறகு துடைத்தாலே போதும்… எண்ணெய் வடிவது பெரும் அளவில் குறைந்து விடும்.
- நீராவி பிடிக்கும் போது நம் சருமத்தில் உள்ள துளைகள் எல்லாம் திறந்து அழுக்குகள் வெளியேறும். அந்த நீரிலும் சிறிது பன்னீரை சேர்த்துக் கொண்டால் முகத்தின் நிறமும் அதிகமாகும். அது மட்டுமில்லாமல் முகம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM