'யூனியன் அஷ்யூரன்ஸ்'  சிறந்த பெறுமதியை வழங்கி தனது நிதி நிலையை மேம்படுத்தியுள்ளது

17 Apr, 2025 | 12:10 PM
image

இலங்கையின் நீண்டகாலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, 2024 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் பிரதான நிதிசார் குறிகாட்டிகளில் உறுதியான பெறுபேறுகளை பதிவுசெய்துள்ளது.

யூனியன் அஷ்யூரன்ஸ் ரூ. 5.2 பில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக (PBT) பதிவு செய்திருந்தது. சிறந்த பெறுமதியை வழங்கி தனது நிதி நிலையை மேம்படுத்தியுள்ளது.

தேறிய கட்டுப்பணசெலுத்தல்களில் (gross written premium) நிறுவனம் 15% வளர்ச்சியை பதிவு செய்துரூ. 21.6 பில்லியனை எய்தியிருந்தது. புதிய வியாபார கட்டுப்பணங்கள்(regular new business premiums) மற்றும் புதுப்பித்தல் கட்டுப்பணங்களில்(renewal premiums) இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

2024 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் பிரதான மைல்கல்லாக, வரலாற்றில் முதன்முறையாகரூ. 100 பில்லியனுக்கு அதிகம் பெறுமதியான மொத்த சொத்துகளை(total assets) பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப்பெறுமதிரூ. 109.5 பில்லியனாக பதிவாகியிருந்தது. நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழான சொத்துகள் (assets under management) 15% இனால்அதிகரித்துரூ. 95.6 பில்லியனை எய்தியிருந்தது. இதில் சந்தை விலைமதிப்பீட்டு வருமதிகள் மற்றும் வியாபார செயற்பாடுகளால் பணமீட்டல் போன்றன பங்களிப்பு செய்திருந்தன.

மேலும், யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மூலதனபோதுவிகிதம் (capital adequacy ratio) 2024 ஆம்ஆண்டின் இறுதியில் ஆரோக்கியமான 264% ஆககாணப்பட்டது, இது ஒழுங்குபடுத்தல் ஆகக்குறைந்த தேவைப்பாடான 120% ஐ விட பெருமளவு உயர்வானதாகும்.

ஜோன்கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் தலைமை அதிகாரியான கிரிஷான் பாலேந்திரா, நிறுவனத்தின் நிதிப்பெறுபேறுகள் தொடர்பாக குறிப்பிடுகையில்,

“2024 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் பல சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும், கிடைத்திருந்த வாய்ப்புகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தி உறுதியான வியாபார வளர்ச்சியை பதிவுசெய்து, வலிமையான நிலையை எய்தியுள்ளது.” என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “2024 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் பதிவு செய்திருந்த சிறந்த நிதிப்பெறுபேறுகள் தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

நிதிசார் வலிமை, வாடிக்கையாளர் பெறுமதி மற்றும் நிலைபேறான வளர்ச்சி ஆகியவற்றுக்கான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. எமது மூலோபாயத்தின் வினைத்திறனை இந்த பெறுபேறுகள் பிரதிபலிப்பதுடன், நாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் சிறப்புக்கான எமது அர்ப்பணிப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பான் ஏசியா வங்கி - இலங்கையின்...

2025-05-15 12:16:21
news-image

LankaPay Technovation விருதுகள் 2025 நிகழ்வில்...

2025-05-15 12:15:16
news-image

‘சஹசக் நிமாவும்’ இன் உத்தியோகபூர்வ வங்கி...

2025-05-15 10:44:47
news-image

விவசாய சமூகத்தின் வளர்ச்சிக்குத் துணைபுரிய கார்கில்ஸ்...

2025-05-14 12:38:06
news-image

செலிங்கோ லைஃப் பணிப்பாளர் சபைக்கு சமித...

2025-05-14 11:12:01
news-image

இந்திய-ஆசிய எக்ஸ்பிரஸ் கடலடித் தொலைதொடர்பு கேபிள்...

2025-05-14 11:09:56
news-image

SLT-MOBITEL ரோமிங் வாடிக்கையாளர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்...

2025-05-13 12:27:11
news-image

தலைமை அலுவலகத்தில் புதிய பெருநிறுவனக் கிளையை...

2025-05-13 13:20:43
news-image

பான் ஏசியா வங்கிக்கு CPM விருதுகள்...

2025-05-08 13:49:59
news-image

தேவி ஜுவ்வலர்ஸ் சீனிவாசகம் – தங்கத்தை...

2025-05-08 11:38:55
news-image

மக்கள் வங்கி தனது 2024ம் ஆண்டுக்கான...

2025-05-08 00:20:23
news-image

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கோப்ரேஷன் ஜெனரல்...

2025-05-07 10:58:20