‘கனா காணும் காலங்கள்’ எனும் தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமாகி, ‘வழக்கு எண் 18/9’, ‘ ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு, ‘மாநகரம் மற்றும் ‘இறுகப்பற்று’ என பல படங்களில் நாயகனாக நடித்து பிரபலமாகியவர் நடிகர் ஸ்ரீ.
இந்நிலையைில், சில நாட்களாகவே திரைத்துறையிலிருந்து காணாமல் போன ஸ்ரீ பற்றி அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
குறிப்பாக, இவரின் சமீபத்திய புகைப்படங்களும், காணொளிகளும் இரசிகர்களை அதிர்ச்சியும், கவலையும் அடையச் செய்துள்ளன. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் மெலிந்த நிலையில், தலை முடியை கலர் செய்து, அரைகுறை ஆடைகள், பாட்டு என அவரின் இயல்பு நிலையை மறந்து இணையத்தில் காணொளிகளை பகிர்ந்து வருகிறார்.
இதனை பார்த்த இரசிகர்கள், இவருக்கு என்னானது என பதிவிட்டு வருகின்றனர். பலரும் இவர் போதைக்கு அடிமையாகிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
இதற்கிடையே, தமிழ்நாட்டிலேயே ஸ்ரீ இல்லை என்றும் ஹரியானாவில் உள்ள குரேகான் நகரில் தான் தற்போது ஸ்ரீ வசித்து வருவதாகவும் அவரது நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்ரீக்கு ஒருவித மனநோய் ஏற்பட்டு இருப்பதாகவும் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சை அளித்தால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், Schizophrenia என்கிற மன நோயால் ஸ்ரீ பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது காதில் யாரோ பேசிக் கொண்டிருப்பது போல தோன்றும் என்றும் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக தனிமையில் குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், விரக்தியின் காரணமாக அவருக்கு இப்படி ஆகியிருக்கலாம் என்கின்றனர் ஸ்ரீயின் நெருங்கிய நண்பர்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM