வடமேற்கு கொங்கோவில் படகு ஒன்று தீப்பிடித்து கவிழ்ந்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (15) இரவு கொங்கோ ஆற்றில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பலர் காப்பற்றப்பட்டுள்ளதோடு, அவர்களில் பலர் கடுமையான தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மாகாண அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மீட்புக் குழுக்கள் காணாமல் போனவர்களைத் தேடும் பணியை புதன்கிழமை ஆரம்பித்துள்ளன.
சுமார் 400 பயணிகளுடன் பயணித்த மோட்டார் பொருத்தப்பட்ட மரப் படகு மபண்டகா நகருக்கு அருகே தீப்பிடித்து எரிந்துள்ளது.
HB கொங்கோலோ என்ற இந்த படகு மடங்குமு துறைமுகத்திலிருந்து போலோம்பா பிரதேசத்தை நோக்கி புறப்பட்டது.
சுமார் 100 உயிர் பிழைத்தவர்கள் மபண்டகா நகர மண்டபத்தில் உள்ள ஒரு தற்காலிக தங்குமிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். தீக்காயங்களுடன் இருந்தவர்கள் உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்ணொருவர் சமைத்துக் கொண்டிருந்தபோது படகு தீப்பிடித்து எரிந்து கவிழ்ந்துள்ளது. இதன்போது, பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பல பயணிகள் படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்து நீந்த முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மத்திய ஆபிரிக்க நாட்டில் படகு விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதற்கு இரவு நேர பயணங்களும், அதிக நெரிசலான படகுகளும் காரணமாக அமைவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடல்சார் விதிமுறைகளை அமுல்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
கொங்கோ ஆறு என்பது ஆபிரிக்காவின் இரண்டாவது நீளமான ஆறு ஆகும். இந்த ஆற்றில் குறிப்பாக உட்கட்டமைப்பு மோசமாக உள்ள பின் தங்கிய பிரதேசங்களுக்கு செல்வதற்கு 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஒரு முக்கிய போக்குவரத்தாக படகு உள்ளது.
அண்மைய ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் படகு விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். ஏனெனில் பயணிகள் அவர்களின் பொருட்கள் நிரம்பிய மரக் கப்பல்களை போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்துவதால் வீதி போக்குவரத்துக்களை அதிகமான மக்கள் கைவிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM