(நெவில் அன்தனி)
டெல்ஹி, அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் புதன்கிழமை (16) இரவு மின்னொளியில் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 32ஆவது போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸை சுப்பர் ஓவரில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் வெற்றிகொண்டது.
அப் போட்டியில் இரண்டு அணிகளும் தலா 188 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இந்த வருட ஐபிஎல் அத்தியாயத்தில் சமநிலையில் முவடைந்த முதலாவது போட்டி இதுவாகும்.
இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 5 பந்துகளில் 2 விக்கெட்களையும் இழந்து 11 ஓட்டங்களைப் பெற்றது.
12 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு சுப்பர் ஓவரை எதிர்கொண்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ், 4 பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.
அபிஷேக் பொரல், கே.எல். ராகுல் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 63 ஓட்டங்கள் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாகப் பதிவானது.
அபிஷேக் பொரல் 49 ஓட்டங்களையும் கே. எல். ராகுல் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களை விட ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டம் இழக்காமல் 34 ஓட்டங்களையும் அணித் தலைவர அக்சார் பட்டேல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 38 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மஹீஷ் தீக்ஷன 40 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
189 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமப்படுத்தியது.
யஷஸ்வி ஜய்ஸ்வால், அணித் தலைவர் சஞ்சு செம்சன் ஆகிய இருவரும் 34 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சஞ்சு செம்சன் 31 ஓட்டங்களுடன் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர் ரியான் பரக் (8), யஷஸ்வி ஜய்ஸ்வால் (51) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர். (112 - 2 விக்.)
தொடர்ந்து நிட்டிஷ் ரானா (51), த்ருவ் ஜுரெல் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 161 ஓட்டங்களாக உயர்த்தினர்.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
த்ருவ் ஜுரெல், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகிய இருவரும் ஆடுகளத்தில் இருந்ததால் ராஜஸ்தான் றோயல்ஸ் சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசி ஓவரை துல்லியமாக வீசிய மிச்செல் ஸ்டார்க் 8 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து போட்டியை சமநிலையில் முடித்து வைத்தார்.
த்ருவ் ஜுரெல் கடைசிப் பந்தில் 26 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். ஷிம்ரன் ஹெட்மயர் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM