வீட்டில் எதிர்மறை ஆற்றலுக்கு காரணமானவை
இரண்டு மூன்று நாட்களுக்கு அழுக்குத் துணிகளை துவைக்காமல் குவியலாக போட்டுவைப்பது, அதேபோல துவைத்த துணிகளை சோபாவிலோ நாற்காலியிலோ குவித்துவைப்பது.
சமையலறை சிங்கில் வழிய வழிய எப்போதும் எச்சில் பாத்திரங்களைப் போட்டு வைத்திருப்பது.
வீட்டு உறுப்பினர்கள் எப்போதும் உரத்த குரலில் பேசிக்கொண்டும் சண்டையிட்டுக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருப்பது.
வீட்டின் மூலைகளில் ஒட்டடை பிடித்திருப்பது.
வீட்டின் தரையைத் துடைக்காமல் அழுக்காக வைத்திருப்பது.
வாசலில் செருப்புகளை தாறுமாறாகப் போட்டுவைப்பது.
நீண்ட நாட்களாக உபயோகப்படுத்தாத பொருட்களை அடைத்து வைத்திருப்பது, பழுதடைந்த ஓடாத பழைய மின்விசிறி, வானொலி, உடைந்த கடிகாரம், பொம்மைகள், பாத்திரங்கள், மண்தொட்டிகள் போன்றவற்றை வைத்திருப்பது.
நிரம்பி வழியும் குப்பைக்கூடை போன்றவை வீட்டின் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வழிகள்
தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை துணிகளைத் துவைத்து, உலர்ந்ததும் மடித்துவைக்கவேண்டும்.
அவ்வப்போது பாத்திரங்களை துலக்கிவைத்துவிட வேண்டும்.
செருப்புகளை அழகாக ஒரு ஸ்டாண்டில் அடுக்கி வைக்கவேண்டும்.
இரண்டு தினங்களுக்கு ஒரு முறை குப்பையை வெளியேற்றிவிட வேண்டும். உடைந்த பொருட்களை உடனே அகற்றவும்.
வீட்டு பூஜை அறையில் தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி பொருத்தி, பச்சைக்கற்பூரம் ஏற்றி, மணியடித்து பூஜை செய்து, சப்தமாக ஸ்லோகங்கள் சொல்லும்போது கெட்ட அதிர்வலைகள் வீட்டை விட்டு ஓடிவிடும்.
நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். மந்திரங்கள், ஸ்லோகங்கள் போன்றவற்றை வீடு முழுக்க ஒலிக்கச்செய்ய வேண்டும்.
கல் உப்பு, தண்ணீர் கொண்டு வீட்டை வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ துடைக்கவேண்டும்.
படுக்கை அறையில் ஒரு கிண்ணத்தில் கல்லுப்பை வைத்தால் கணவன் – மனைவி இடையே உள்ள பிணக்குகள் நீங்கும்.
பகலில் எப்போதும் ஜன்னல் கதவுகளைத் திறந்துவைத்து இயற்கையான சூரிய ஒளி வீட்டுக்குள் வர வழி செய்யவேண்டும்.
வீட்டில் ஆங்கங்கே பொருட்களை போட்டுவைக்காமல், அழகாக அடுக்கி வைக்கவேண்டும்.
வீட்டில் துளசிச்செடி, கற்றாழை வளர்ப்பது நேர்மறை ஆற்றலை உருவாக்கும். அவை சுத்தமான காற்றை வழங்கி, எதிர்மறை ஆற்றலை விரட்டுகின்றன.
தண்ணீர், எலுமிச்சைச் சாறு, வெள்ளை வினாகிரி மற்றும் உப்பு கலந்து ஜன்னல்கள் மற்றும் கதவு கைப்பிடிகளை சுத்தம் செய்ய வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் பெருகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM