கம்பஹா நகரத்தில் உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கம்பஹா நகரத்தில் உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் சிறிய லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டின் போது, லொறியில் பயணித்த இருவரும் லொறியிலிருந்து கீழே இறங்கி அருகிலிருந்த கடைக்குள் ஓடிச் சென்றததால் அவர்களுக்கு எந்த காயங்களும் ஏற்டவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய “அவிஷ்க மல்லி” என்பவரின் சித்தியின் மகனை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
“கணேமுல்ல சஞ்சீவவின்” கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறிருப்பினும், “அவிஷ்க மல்லி” என்பவரின் சித்தியின் மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் எந்த குற்றச்சாட்டுகளும் பதிவாகியில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM