கண்டி - அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹதிரிம பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளது.
அலவத்துகொடை, ஹதிரிம பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்தன்று உயிரிழந்த வயோதிபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது வயோதிபர் திடீரென சுகயீனமுற்றுள்ள நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் அலவத்துகொடை மற்றும் ஹோகந்தர ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 24, 25 மற்றும் 61 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM