நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான ஆரி அர்ஜுனன் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'போர்த் ஃப்ளோர்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- நடிகர் ஆர்யா -இயக்குநர் நித்திலன் ஆகியோர் இணைந்து அவர்களுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் எல். ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகி உள்ள 'போர்த் ஃப்ளோர் ' எனும் திரைப்படத்தில் ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா, பவித்ரா , இயக்குநர் சுப்பிரமணிய சிவா , தலைவாசல் விஜய் , ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜே. லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தரண் குமார் இசையமைத்திருக்கிறார். திரில்லர் ஜேனரிலான இந்தத் திரைப்படத்தை மனோ கிரியேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிரும் புதிருமான தோற்றத்திலும், நான்காவது தளம் தொடர்பான குறியீடுகளும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM