ஒட்டுசுட்டானில் பனை,தென்னைவள கூட்டுறவுச்சங்க உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் சிக்கல் ; நிலமைகளை ஆராய்ந்து தீர்வுகாண ரவிகரன் எம்.பி  நடவடிக்கை  

Published By: Vishnu

16 Apr, 2025 | 02:35 AM
image

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கம் தமது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதில் சிக்கல் நிலையை எதிர்கொள்வதால், குறித்த கூட்டுறவுச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் பெருத்த வாழ்வாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந் நிலையில் ஒட்டுசுட்டான் பனைதென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் அழைப்பை ஏற்று செவ்வாயக்க் (15) நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், ஒட்டுசுட்டான் பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் தமது விற்பனை நிலையங்களினூடாக தமது உற்பத்திகளை விற்பனை செய்வதில் பல இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும், இதனால் தமது அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அன்றாட வாழ்வாதாரத்திற்கு இடர்படும்நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.

இந் நிலையில் ஒட்டுசுட்டன் - கற்சிலைமடுப் பகுதியில் அமைந்துள்ள பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்திற்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள், ஒட்டுசுட்டான் பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடி சிக்கல் நிலமைகள் குறித்துக் கேட்டறிந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பனை,தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளை, ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகத்திற்கு அழைத்துச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலருடனும் கலந்துரையாடி, ஒட்டுசுட்டான் பனை,தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தினர் எதிர்நோக்கியுள்ள தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர்...

2025-04-30 02:57:51
news-image

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர்...

2025-04-30 01:48:14
news-image

மே தினத்தன்று பிரதான அரசியல் கட்சிகள்...

2025-04-29 21:29:39
news-image

குழந்தைகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனை...

2025-04-29 17:31:04
news-image

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம்...

2025-04-30 02:54:21
news-image

ரணிலின் சமூக வலைத்தளங்களிலிருந்தே ஜனாதிபதி தகவல்களைப்...

2025-04-29 17:24:41
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு...

2025-04-29 19:00:38
news-image

வடக்கு கரையோர பிரதேசங்களில்  போதைப்பொருள் பாவனை...

2025-04-29 21:18:09
news-image

கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்...

2025-04-29 21:24:23
news-image

கடந்த தேர்தல்களில் அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை...

2025-04-29 17:33:26
news-image

வில்பத்து தேசிய பூங்காவில் ஆமைகளை பிடிக்க...

2025-04-29 17:16:00
news-image

சந்தேகத்தின் கைதுசெய்ய நபரை ஈவிரக்கமின்றி தாக்கிய...

2025-04-29 17:27:56