கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் புனித சின்னம் காட்சிப்படுத்தப்படும் காலப்பகுதியில் கண்டி மாநகரில் உள்ள உணவகங்கள் விசேட கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட உள்ளதாக கண்டி மாநகர சபை பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் பசன் ஜயசிங்க தெரிவித்தார்.
ஶ்ரீதலதா மாளிகை கண்காட்சி தொடர்பாக கண்டி மாநகர சபையின் சுகாதார வைத்தியப்பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்படி விசேட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் நகர எல்லையிலுள்ள உணவகங்கள், நடமாடும் விற்பனை நிறுவனங்கள் மற்றும் நடைபாதை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், அன்னதானம் வழங்குவோர் உட்பட அனைத்து அமைப்புக்களும் பரிசோதனை செய்யப்படும்.
மேலும் அன்னதானம், தானசாலை போன்ற உணவு வழங்கும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடமாடும் உணவு வர்த்தகர்களும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.
அத்துடன் அவர்கள் எவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது தொடர்பான விதிகள் அடங்கிய பிரமாணக்குறிப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM