(நெவில் அன்தனி)
மார்ச் மாதத்திற்கான ஐசிசியின் அதிசிறந்த வீரராக இந்தியாவின் ஷ்ரேயாஸ் ஐயரும், அதிசிறந்த வீராங்கனையாக அவுஸ்திரேலியாவின் ஜோர்ஜியா வொல்லும் பெயரிடப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் (துபாய்) நடைபெற்ற ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் கடைசிக் கட்டத்தில் இந்தியா சார்பாக துடுப்பாட்டத்தில் அதி சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தியதற்காக ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அதிசிறந்த வீரருக்கான விருதை முதல் தடவையாக வென்ற ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று வருடங்களின் பின்னர் இப்போது இரண்டாவது தடவையாக இந்த விருதை வென்றுள்ளார்.
2025 மார்ச் மாதம் நடைபெற்ற கடைசி மூன்று ஐசிசி சம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரு அரைச் சதம் உட்பட் 3 போட்டிகளில் 40க்கும் மேற்பட்ட ஓட்டங்களை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.
நியூஸிலாந்துக்கு எதிராக கடைசி ஏ குழு போட்டியில் 79 ஓட்டங்களையும் அவுஸ்திரேலியாவுக்கு எதரான அரை இறுதிப் போட்டியில் 45 ஓட்டங்களையும் நியூஸிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 48 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் பெற்று இந்தியா சம்பியனாவதில் பெரும் பங்காற்றி இருந்தார்.
இந்த மூன்று போட்டிகளில் மொத்தமாக 172 ஓட்டங்களைப் பெற்ற அவரது சராசரி 57.33ஆக இருந்தது.
இதேவேளை, அவுஸ்திரேலிய வீராங்கனை ஜோர்ஜியா வொல் முதல் தடவையாக ஐசிசி மாதத்தின் அதிசிறந்த வீராங்கனை விருதை வென்றெடுத்துள்ளார்.
கடந்த நான்கு மாதங்களில் இந்த விருதை வென்ற நான்காவது அவுஸ்திரேலிய வீராங்கனை ஜோர்ஜியா வொல் ஆவார்.
அதற்கு முன்னர் அனாபெல் சதர்லண்ட் (2024 டிசம்பர்), பெத் மூனி (2025 ஜனவரி), அலனா கிங் (2025 பெப்ரவரி) ஆகிய அவுஸ்திரேலிய வீராங்கனைகள் இந்த விருதை தொடர்ச்சியாக வென்றிருந்தனர்.
கடந்த வருடம் டிசம்பார் மாதம் அவுஸ்திரேலிய அணியில் அறிமுகமான ஜோர்ஜியா வொல், கடந்த மாதம் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் துடுப்பாட்டத்தில் அசத்தி இருந்தார்.
நியூஸிலாந்தில் நடைபெற்ற அந்தத் தொடரில் அவுஸ்திரேலியா 3 - 0 என முழுமையாக வெற்றிபெற்றது.
அந்த வெற்றியில் ஜோர்ஜியா வொல் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி இருந்தார்.
மூன்று போட்டிகளிலும் முறையே 50 ஓட்டங்களையும் 36 ஓட்டங்களையும் 75 ஓட்டங்களையும் பெற்று மொத்தம் 161 ஓட்டங்களை குவித்த ஜோர்ஜியா வொல்லின் சராசரி 53.66 ஆக இருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM