அநுராதபுரம் - மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லமொராண பிரதேசத்தில் திங்கட்கிழமை (14) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கெப் வாகனத்தின் சாரதியும் அதில் பயணித்த நபரொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கெப் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ள நிலையில் அதில் பயணித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிஹிந்தலை நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 மற்றும் 37 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM