கடந்த 06 ஆம் திகதி அநுராதபுரம் மிஹிந்தலை பகுதியிலுள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை கடத்திச் சென்று 45 இலட்சம் ரூபா பணத்தினை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய் உட்பட 5 சந்தேக நபர்கள் மிஹிந்தலை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை நகரிலுள்ள ஹோட்டல் உரிமையாளரான ஓய்வு பெற்ற கடற்படை உத்தியோகத்தரினால் 07 ஆம் திகதி மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு சிப்பாய் உட்பட ஐந்து பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலன்னறுவை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 30 வயதிற்கும் 48 வயதிற்கும் இடைப்பட்ட வர்கள் ஆவார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மிஹிந்தலை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர், சந்தேக நபர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM