தனியார் வகுப்புகள் குறித்து மதத் தலைவர்கள் முன்வைத்துள்ள விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம் - பிரதமர்

08 Apr, 2025 | 05:07 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

மேலதிக தனியார் வகுப்புக்களை கண்காணிப்பதற்கு கல்வி அமைச்சில்  எவ்விதமான கொள்கைகளும் கிடையாது. ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் தனியார் வகுப்புகள் நடத்துவது  பிரிவெனா உட்பட அறநெறி கல்வி முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மத தலைவர்கள் முன்வைத்துள்ள விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தி உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்று பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது  தேசிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மசிறி திஸாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கேள்விகளை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் தர்மசிறி திஸாநாயக்க,  தனியார் மேலதிக வகுப்புகளில்  கல்வி நடவடிக்கைகளுக்கு செல்லும் மாணவர்கள் குறித்த ஆசிரியர்களினால் பாலியல் வன்கொடுமைகளுக்கும், வன்கொடுமைகளுக்கும்  உள்ளாவதாக  ஊடகங்கள்  தொடர்ச்சியாக  செய்தி வெளியிடுகின்றன. ஒருசில தனியார்  மேலதிக வகுப்புகளின் ஆசிரியர்களின் கல்வி தகைமை குறித்தும் பிரச்சினைகள் காணப்படுகிறது.  ஆகவே இந்த விடயங்களை கண்காணிப்பதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் என்றார்.

இதற்கு  பதிலளித்த கல்வி அமைச்சரும், பிரதமருமான  கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாட்டில் சட்டம் என்பதொன்று உள்ளது. சிறுவர் துஸ்பிரயோகத்துக்கு எதிராக  கடுமையான நடவடிக்கைகள்  எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து மேலதிக கேள்வியை முன்வைத்த   தர்மசிறி திஸாநாயக்க,  ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் பிரிவெனா  உட்பட ஏனைய மதங்களின் அறநெறி கல்வி நடவடிக்கைகள்  நடைபெறும்.  சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைக்கு  தோற்றவிருக்கும் மாணவர்களை  போன்று  கனிஸ்ட பிரிவு வகுப்பு மாணவர்களும் ஞாயிற்றுக்கிழமை முழு நேர மேலதிக தனியார் வகுப்புகளுக்கு செல்கிறார்கள். இதனால் மதம் சார்ந்த கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இதனை கண்காணிப்பதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் உள்ளதா, என கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் இந்த விடயம் தொடர்பில் சர்வமத தலைவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். உரிய  தரப்பினருடன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். வெகுவிரைவில் உரிய தீர்மானத்தை அறிவிப்போம்  என்றார்.

இதன்போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன,  மேலதிக தனியார் வகுப்புக்களின் தகைமை  கண்காணிக்கப்படுமா என்று கேள்வியெழுப்பப்பட்டது. இருப்பினும்  அதற்கு பதில் கிடைக்கவில்லை என்றார்.

இதற்கு பதிலளித்த  பிரதமர்,  மேலதிக தனியார் வகுப்புக்களை கண்காணிப்பதற்கு கல்வி அமைச்சில்  எவ்விதமான கொள்கைகளும் கிடையாது என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ, மவுசாக்கலை நீர்த்தேக்கங்கள் வான்பாயும் மட்டத்தை...

2026-08-10 10:50:05
news-image

மாத்தறை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்குச்...

2026-08-10 10:24:08
news-image

நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிர பரவல்:...

2026-08-10 10:10:23
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன...

2026-08-10 10:01:27
news-image

ஹெட்டிபொலவில் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை...

2026-08-10 09:53:53
news-image

தெஹிவளையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை...

2026-08-10 09:58:47
news-image

திவுலபெலஸ்ஸவில் 88 இலட்சம் ரூபா பெறுமதியான...

2026-08-10 09:42:37
news-image

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன்...

2026-08-10 09:10:24
news-image

தமன பகுதியில் புதையல் தோண்டிய நபர்...

2026-08-10 09:04:44
news-image

நாடளவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை...

2026-08-10 10:46:29
news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04