முன்னைய ஆட்சியின் போது அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்டிருந்த பாது காப்பு ஒப்பந்தம் தொடர்ந்தும் நீடிக்கப்ப டும். இதன்பிரகாரம் குறித்த ஒப்பந்தத்திற்கான காலம் நிறைவடைந்த போதும் ஒப்பந்தம் மீள் புதுப்பிக்கப்பட்டு விரைவில் கைச்சாத்திடப்படும். இது தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டோம். அமெரிக்க அரசின் முடிவினை எதிர்பார்த்துள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத் தில் விவாதம் நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட் டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டில் நேற்று முன்தினம் எழுப்பிய கேள்விக்கு நேற்று சபையில் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் அளித்த பதிலில் மேலும் தெரிவித்தாவது,
முன்னைய ஆட்சியின்போது அமெரிக் காவுடன் கைச்சாத்திடப்பட்டிருந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து நீடிக்கவுள்ளோம். இதன்பிரகாரம் அமெரிக்கா வின் பாதுகாப்புத் துறையின் உதவியுடன் இராணுவ பயிற்சி, நலன்புரி செயற்பாடு, ஒன்றிணைந்த வேலைத்திட்டங்கள் போன்ற விடயங்களில் ஒப்பந்தத்தில் உள்ளடங்குகின்றன.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையின் முப்படையின் பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அத்துடன் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை யுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. இதன்போது ஒப்பந்தத் தில் உள்ளடங்க வேண்டிய விடயதானங் கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு அமெரிக்கா இன்னும் கால அவகாசம் கோரியுள்ளது. எனினும் முன்னைய ஆட்சி யில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கும் புதிய ஒப்பந்தத்திற்கு வித்தியாசம் உள் ளது.
அதாவது முன்னைய ஒப்பந்தத்தின் பிரகாரம் பத்து வருடத்தின் பின்னரே ஒப்பந்ததை இரத்து செய்யமுடியும். எனினும் புதிய நிபந்தனையின் பிரகாரம் எமக்கு விதிமுறைக்கு அப்பால் செல்லும் தருணத்தில் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய முடியும். எனினும் இதுவரை நாம் ஒப்பந்தம் கைச்சாத்திடவில்லை என்றார்.
இதன்போது எழுந்து பேசிய அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியுமா? அதற்கு இடம் வழங்குவீர்களா என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக் கிரமசிங்க, அமெரிக்காவுடன் கைச்சாத் திடப்படவுள்ள ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த முடி யும். எனினும் இதனை ஆராய்ந்த பின்பே தீர்மானிக்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM