தேனீ கொட்டினால், உடனடி கவனிப்பு தேவை. தேனீ, ஊசி போன்ற (stinger) ஒன்றை விட்டுச் செல்லும். அது நஞ்சை உடலுக்குள் அனுப்புகிறது.
அதனால் முதலில், நகங்கள் அல்லது மட்டை போன்ற பொருளால் அதை மெதுவாக தள்ளி நீக்கவும் (ஊசி போன்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது நஞ்சை மேலும் உள்ளே அழுத்தும்).
பின்னர், பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தமான நீர் மற்றும் சவர்க்காரம் கொண்டு நன்கு கழுவவும்.
அதன்பின், குளிர்ந்த துணி அல்லது ஐஸ் கட்டி வைத்துக் குளிரூட்டவும். வீக்கம் மற்றும் வலி குறைக்க இது உதவும். பசும்பாலால் காயப்பட்ட இடத்தை அழுத்தலாம். (இது, வலி தணிக்க உதவும்).
பேக்கிங் பவுடருடன் தண்ணீர் சேர்த்து தேனீ கொட்டிய இடத்தில் பூசலாம். அது விஷத்தை செயலிழக்க உதவும். அதுபோல, வினாகிரியையும் பயன்படுத்தலாம்.
மேலும், ஒவ்வாமை அல்லது தீவிர எதிர்விளைவுகள் இருந்தால், மூச்சுத் திணறல், உடல் முழுவதும் அரிப்பு, கண்கள் வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், உடனடியாக மருத்துவ உதவியை அணுகவும்.
அதேசமயம், மருந்துகள் எதுவும் கைவசம் இல்லையென்றால், மருத்துவரின் அனுமதி பெற்ற ‘பெயின்-கில்லர்’ வில்லைகளை எடுத்துக் கொள்ளலாம். வலி மற்றும் வீக்கம் குறைக்க இவை உதவலாம்.
எச்சரிக்கை:
தேனீ கொட்டிய இடத்தை வாயால் ஊதவோ அல்லது வெறுங்கைகளால் தொடவோ வேண்டாம். முக்கியமாக, ஒரே நேரத்தில் பல தேனீக்கள் கொட்டியிருந்தால், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM