அமெரிக்க வரி விதிப்பு வெறும் வர்த்தக பிரச்சினை மாத்திரமல்ல விழிப்புணர்வுக்கான அழைப்பாகும்: சஜித் பிரேமதாச

03 Apr, 2025 | 02:50 PM
image

(எம்.மனோசித்ரா)

அமெரிக்கா விதித்துள்ள 44 சதவீத வரி என்பது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு விழிப்புணர்வுக்கான அழைப்பாகும். எனவே, தற்போதைய அரசாங்கம் சர்வத்துடனான தொடர்புகள் குறித்த தமது பழைய மரபுகளை இப்போதாவது மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அந்த பதிவில் எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அமெரிக்கா விதித்துள்ள 44 சதவீத வரி என்பது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு விழிப்புணர்வுக்கான அழைப்பாகும். தற்போதைய அரசாங்கத்திலிருப்பவர்கள் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியிலிருந்த போது சகல சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் தடுத்தனர்.

உலகமயமாக்கலையும் அவமதித்தனர். முதலீடுகளை சர்வதேச ஊடுருவலாகவே பார்த்தனர். அந்த மரபு இனியாவது முடிவுக்கு வர வேண்டும். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இலங்கைக்கு ஒரு மூலோபாய மறுசீரமைப்பு தேவையாகும்.

சிந்தனை உணர்வுகளுக்கு மேல் கூட்டாண்மைகளை அணுக வேண்டும். சில உள்ளூர் நண்பர்களை திருப்திப்படுத்துவதற்காக பின்பற்றும் வெறுப்புணர்வை கைவிட வேண்டும். இந்தியா மற்றும் பங்களாதேஷூடன் ஆசியாவை மையமாகக் கொண்ட வர்த்தக உத்தியை உருவாக்க வேண்டும்.

வரிகளிலிருந்து உற்பத்தி சார்ந்த, முதலீடுகளுக்கு மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, மற்ற நாடுகளின் பிராந்திய நலன்களை அமைதியாக மீறுவதை நாம் நிறுத்த வேண்டும். பரஸ்பர நலன்களைப் பாதுகாப்பதே முன்னோக்கிச் செல்லும் ஒரே வழி. அபிவிருத்தியடைந்த நாடுகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. நாமும் அதைச் செய்ய வேண்டிய நேரம் இதுவாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கட்டணத்தை அதிகரித்தால் நீதிமன்றம் செல்வோம்...

2025-05-18 17:21:25
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து...

2025-05-18 17:41:46
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுக்களை முற்றாக...

2025-05-18 18:14:48
news-image

அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ்...

2025-05-18 20:29:40
news-image

ஜனாதிபதி தொடர்பில்  துசித ஹல்லொலுவ வெளிப்படுத்திய...

2025-05-18 20:24:57
news-image

இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலையில் முள்ளிவாய்க்கால்...

2025-05-18 20:16:50
news-image

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய...

2025-05-18 20:08:26
news-image

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை...

2025-05-18 19:55:49
news-image

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

2025-05-18 19:30:03
news-image

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ்...

2025-05-18 19:09:35
news-image

மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

2025-05-18 18:54:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது...

2025-05-18 17:25:36