(எம்.மனோசித்ரா)
அமெரிக்கா விதித்துள்ள 44 சதவீத வரி என்பது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு விழிப்புணர்வுக்கான அழைப்பாகும். எனவே, தற்போதைய அரசாங்கம் சர்வத்துடனான தொடர்புகள் குறித்த தமது பழைய மரபுகளை இப்போதாவது மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அந்த பதிவில் எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அமெரிக்கா விதித்துள்ள 44 சதவீத வரி என்பது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல. இது ஒரு விழிப்புணர்வுக்கான அழைப்பாகும். தற்போதைய அரசாங்கத்திலிருப்பவர்கள் கடந்த காலங்களில் எதிர்க்கட்சியிலிருந்த போது சகல சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களையும் தடுத்தனர்.
உலகமயமாக்கலையும் அவமதித்தனர். முதலீடுகளை சர்வதேச ஊடுருவலாகவே பார்த்தனர். அந்த மரபு இனியாவது முடிவுக்கு வர வேண்டும். அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இலங்கைக்கு ஒரு மூலோபாய மறுசீரமைப்பு தேவையாகும்.
சிந்தனை உணர்வுகளுக்கு மேல் கூட்டாண்மைகளை அணுக வேண்டும். சில உள்ளூர் நண்பர்களை திருப்திப்படுத்துவதற்காக பின்பற்றும் வெறுப்புணர்வை கைவிட வேண்டும். இந்தியா மற்றும் பங்களாதேஷூடன் ஆசியாவை மையமாகக் கொண்ட வர்த்தக உத்தியை உருவாக்க வேண்டும்.
வரிகளிலிருந்து உற்பத்தி சார்ந்த, முதலீடுகளுக்கு மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, மற்ற நாடுகளின் பிராந்திய நலன்களை அமைதியாக மீறுவதை நாம் நிறுத்த வேண்டும். பரஸ்பர நலன்களைப் பாதுகாப்பதே முன்னோக்கிச் செல்லும் ஒரே வழி. அபிவிருத்தியடைந்த நாடுகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. நாமும் அதைச் செய்ய வேண்டிய நேரம் இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM