அம்பலாந்தோட்டை- எலேகொட மேற்கு பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று புதன்கிழமை (02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் நேற்றையதினம் மாலை பியகம பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அம்பலாந்தோட்டை மாமடல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன், அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM