அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடம்தொட்ட பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த சந்தேக நபரொருவர் எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (01) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி - மீட்டியாகொடை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பலாங்கொடை, இடம்தொட்ட பிரதேசத்திற்கு கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி மாலை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் 'பொடி சுத்தா' என அழைக்கப்படும் கிருசாந்த மென்டிஸ் என்பவரை சுட்டுக் கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM