கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளிலிருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றொரு கடற்படை வீரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த விவகாரத்தில் 5 கடற் படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது மற்றொரு கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலையில் உள்ள ருஹுனு கடற்படை முகாமில் சேவையாற்றி வந்த கடற்படை வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாயவுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
நேற்று முன் தினம் காலை 10.00 மணிக்கு குற்றப் புலனாயவுப் பிரிவின் சமூக கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவில் ஆஜரான குறித்த கடற்படை வீரரிடம் இரவு 8 மணிக்கும் மேலாக சுமார் 10 மணி நேரத்துக்கும் அதிக நேரம் விசாரணை நடத்தப்பட்டே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க உள்ளதுடன் விளக்கமறியலில் ஏனைய சந்தேக நபர்களான கடற்படை சிறப்பு புலனாயவுப் பிரிவின் கமான்டர் சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ ஆகியோர் இருந்து ுந்து வருகின்றனர்.
இந் நிலையிலேயே புதிதாக மற்றொரு சந்தேக நபராக கடற்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM