டெங்கு நோயினால் 200 பேர் பலி

Published By: Raam

20 Jun, 2017 | 11:42 PM
image

(ஆர்.யசி)

நாட்டில் மோசமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 200 பேர் உயிரிழந்துள்ளதுடன்  63 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளர்கள் நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சகல அரச வைத்தியசாலைகளிலும் 100க்கும் அதிகாமான  நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த மாதத்தில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக நாட்டில் சகல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது.  இந்த ஆண்டில் இதுவரையிலான ஆறுமாத காலத்தில் 63 ஆயிரத்து  987  பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக சகல மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவிவரும் நிலையில் நாட்டில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வைத்திய சாலையில்  100 க்கும் அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

மேலும் அதிக மழைவீழ்ச்சி  காரணமாக தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிளை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் வீட்டு மற்றும் வெளி சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் தொடர்ச்சியாக சுகாதார துறையினர் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் ஒரு நபருக்கு மூன்று நாட்களுக்கு மேலாக காய்ச்சல், இருமல் இருக்குமாயின் உடனடியாக வைத்திய உதவிகளை நாடவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37