(செ.சுபதர்ஷனி)
அம்பலாந்தோட்டை பகுதியில் இன்று திங்கட்கிழமை (30) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல பகுதியில் இன்றைய தினம் அதிகாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த சந்தேகநபர்கள் இருவர் அங்கிருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
30 வயதுடைய அம்பாந்தோட்டை கொக்கல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை காயமடைந்த நபர் மற்றும் பிறிதொரு தரப்பினருக்கிடையில் நீண்டகாலம் நிலவிவந்த முன்விரோதம் காரணமாக மேற்படி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை சந்தேகநபர்கள் குற்றச் செயலுக்காக பயன்படுத்தியுள்ளனர். மேலும் சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM