மர்மங்கள் நிறைந்த குகை - வியட்நாமின் அதிசயம்

30 Mar, 2025 | 01:52 PM
image

பூமியைத் தோண்டினால் புதையல் கிடைக்கும் என்று கூறுவதைப் போல் நாம் வாழும் இந்த உலகத்தில் நம்மால் நம்ப முடியாத அளவுக்கு வியப்பில் ஆழ்த்தும் இயற்கையான கொடைகளும் உண்டு. 

அவற்றுள் ஒன்று தான் வியட்நாமில் அமைந்துள்ள சோன் டோங் குகை. இந்தக் குகை தான் உலகிலேயே மிகவும் ஆழமானது மற்றும் மர்மங்கள் நிறைந்தது எனக் கூறப்படுகிறது. 

கார்போனிஃபெரஸ் மற்றும் பெர்மியன் சுண்ணாம்புக் கல்லால் ஆன இக் குகையின் உயரம் 200 மீட்டர் மற்றும் அதன் நீளம் சுமார் ஐந்து கிலோமீட்டர்.

இக் குகைக்குள் அடர்ந்த காடுகள், அகழிகள் மற்றும் ஆறுகளும் இருப்பது கூடுதல் சிறப்பு. இதனை வியட்நாமின் பெரிய சுவர் எனவும் அழைப்பர்.

இக் குகைக்குள் எதிரொலிக்கும் காற்றின் சத்தமானது வெளிப்புற வாசல் வரையில் கேட்கும். 

1991 ஆம் ஆண்டு வியட்நாமிலுள்ள மரம் வெட்டும் ஒருவரால் இக் குகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு இதுவொரு சுற்றுலாத் தலமாக மாறியது. 

ஒவ்வொரு பருவக் காலத்திலும் வெறும் 1000 பேர் மட்டுமே குகைக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அந் நாட்டு பண மதிப்பின்படி இதற்குள் வருவதற்கு 3000 டொலர்கள் செலுத்த வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்