(எம்.வை.எம்.சியாம்)
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ 15 ஹோட்டலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலானாய்வுத்திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மேற்குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விடயங்களை அறிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை நாளை திங்கட்கிழமை (31) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்யுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் நாளை திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாத்தறை வெலிகம டபிள்யூ 15 ஹோட்டலில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வெள்ளை வேன் ஒன்றில் வருகை தந்த சிலரை இலக்கு வைத்து வெலிகம பொலிஸாரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது வேனில் இருந்த இருவர் காயமடைந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் குறித்த வேனில் வந்தவர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் என மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிக்கொணரப்பட்டது. அத்துடன் சம்பவத்தின் போது உயிரிழந்தவர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவராவார்.
எவ்வாறாயினும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது குறித்த அதிகாரிகளை சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அனுப்பப்பட்டமை சட்டரீதியானது அல்ல என தெரியவந்தது.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கமைய இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸ் மா அதிபர் தேசபந்துதென்னக்கோன் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூம் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM