வெலிகம துப்பாக்கிச் சூடு ; முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு சிஐடி அழைப்பாணை

Published By: Digital Desk 3

30 Mar, 2025 | 03:15 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ 15 ஹோட்டலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலானாய்வுத்திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேற்குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விடயங்களை அறிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை நாளை திங்கட்கிழமை (31) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்யுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய அவர் நாளை திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாத்தறை வெலிகம டபிள்யூ 15 ஹோட்டலில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வெள்ளை வேன் ஒன்றில் வருகை தந்த சிலரை இலக்கு வைத்து வெலிகம பொலிஸாரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது வேனில் இருந்த இருவர் காயமடைந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். 

இந்நிலையில் குறித்த வேனில் வந்தவர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் என மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிக்கொணரப்பட்டது. அத்துடன் சம்பவத்தின் போது உயிரிழந்தவர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவராவார்.

எவ்வாறாயினும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது  குறித்த அதிகாரிகளை சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அனுப்பப்பட்டமை சட்டரீதியானது அல்ல என தெரியவந்தது. 

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கமைய இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸ் மா அதிபர் தேசபந்துதென்னக்கோன் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூம் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின் கட்டணத்தை அதிகரித்தால் நீதிமன்றம் செல்வோம்...

2025-05-18 17:21:25
news-image

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பிடமிருந்து...

2025-05-18 17:41:46
news-image

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் கூற்றுக்களை முற்றாக...

2025-05-18 18:14:48
news-image

அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ்...

2025-05-18 20:29:40
news-image

ஜனாதிபதி தொடர்பில்  துசித ஹல்லொலுவ வெளிப்படுத்திய...

2025-05-18 20:24:57
news-image

இலங்கை தமிழரசு கட்சி திருகோணமலையில் முள்ளிவாய்க்கால்...

2025-05-18 20:16:50
news-image

தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலுக்கும் உண்மை, நீதியை அடைய...

2025-05-18 20:08:26
news-image

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் : நம்பிக்கை...

2025-05-18 19:55:49
news-image

சமத்துவக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

2025-05-18 19:30:03
news-image

மட்டு வாகரை முகத்துவாரம் கடற்கரையில் தமிழ்...

2025-05-18 19:09:35
news-image

மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

2025-05-18 18:54:34
news-image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது...

2025-05-18 17:25:36