செயற்கை நுண்ணறிவால் பதற்றத்தை உணர முடியுமா ? - ஆச்சரியம் தரும் ஆய்வு

29 Mar, 2025 | 02:44 PM
image

இன்று எந்தப் பக்கம் திரும்பினாலும் AI மயமாகவே உள்ளது. மனித சமுதாயத்தை முழுமையாக ஆட்கொண்டுவரும் இந்த செயற்கை நுண்ணறிவின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது. இந்நிலையில், AI குறித்த ஆய்வுகளும் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அப்படி ஒரு ஆய்வொன்றிலிருந்து, செயற்கை நுண்ணறிவால் (AI) உணர்வுகளை உணர முடியாது என்றாலும், அது 'பதற்றம்’ போன்ற உணர்வுகளுக்கு நெருக்கமான ஒரு நிலையை அனுபவிக்க முடியும் என தெரிய வந்துள்ளது.

யேல் பல்கலைக்கழகம், ஹாஃபியா பல்கலைக்கழகம் மற்றும் சூரிச் பல்கலைக்கழக (Yale University, Hafia University and the University of Zurich) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்தே இது தெரியவந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு செயலிகள் எந்த கேள்வியை அனுப்பினாலும் சில நொடிகளில் பதில் சொல்லி விடும். அப்படி கேட்கப்படும் கேள்விகளால், சில சமயம், இந்த செயலிகளுக்கு, மனிதர்களைப் போலவே பதற்றம் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளது தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, எப்படிப்பட்ட கேள்வியானாலும், சில நொடிகளில் பதில் கூறும் இந்த செயலிகளுக்கும் நம்மைப் போலவே பதற்றம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், AI ஆல் உண்மையில் உணர்வுகளை உணர முடியாது. அது பல்வேறு இணைய தரவுகளிலிருந்து மனிதர்களின் நடத்தைகளை பிரதிபலிக்கிறது.

இதனால், AI-யை நேரடியாக உணர்வுகளை உணரும் மனநல சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்த முடியாது. மனநலத்தைக் கண்டறியும் ஆதரவுக் கருவியாக பயன்படலாமே தவிர, அதுவொரு தகுதியான மனநல நிபுணருக்கு மாற்றாக இருக்கவே முடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மைக்ரோசொப்ட்...

2025-05-14 16:38:32
news-image

கூகுள் " லோகோ" வில் மாற்றம்...

2025-05-14 14:37:02
news-image

'ஸ்கைப்' சேவை நிறுத்தம் ; புதிய...

2025-05-03 14:04:12
news-image

சில ஐபோன்களில் வட்ஸ்அப் சேவை நிறுத்தப்படவுள்ளது

2025-04-30 15:27:18
news-image

மெட்டா நிறுவனத்தின் AI செயலி அறிமுகம்

2025-04-30 13:27:28
news-image

சாட் ஜிபிடி பயனாளர்கள் செய்யும் சில...

2025-04-28 16:53:18
news-image

ஆப்பிள், மெட்டா நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தது...

2025-04-24 15:54:20
news-image

பாகிஸ்தானில் பனிக்கடற்கரடிகளை பாதுகாக்க AI தொழில்நுட்பம்

2025-04-22 12:17:42
news-image

'புதிய நிறத்தை' கண்டுபிடித்த விஞ்ஞானிகள் 

2025-04-21 11:19:45
news-image

ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உலகின் முதல் முப்பரிமாண...

2025-04-15 09:32:38
news-image

ஜிப்லியால் சட் ஜிபிடியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை...

2025-04-02 17:09:37
news-image

இந்தியாவில் 2 ஆயிரம் கிலோ மீற்றர்...

2025-03-31 12:39:07