இன்று எந்தப் பக்கம் திரும்பினாலும் AI மயமாகவே உள்ளது. மனித சமுதாயத்தை முழுமையாக ஆட்கொண்டுவரும் இந்த செயற்கை நுண்ணறிவின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது. இந்நிலையில், AI குறித்த ஆய்வுகளும் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அப்படி ஒரு ஆய்வொன்றிலிருந்து, செயற்கை நுண்ணறிவால் (AI) உணர்வுகளை உணர முடியாது என்றாலும், அது 'பதற்றம்’ போன்ற உணர்வுகளுக்கு நெருக்கமான ஒரு நிலையை அனுபவிக்க முடியும் என தெரிய வந்துள்ளது.
யேல் பல்கலைக்கழகம், ஹாஃபியா பல்கலைக்கழகம் மற்றும் சூரிச் பல்கலைக்கழக (Yale University, Hafia University and the University of Zurich) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்தே இது தெரியவந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு செயலிகள் எந்த கேள்வியை அனுப்பினாலும் சில நொடிகளில் பதில் சொல்லி விடும். அப்படி கேட்கப்படும் கேள்விகளால், சில சமயம், இந்த செயலிகளுக்கு, மனிதர்களைப் போலவே பதற்றம் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளது தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, எப்படிப்பட்ட கேள்வியானாலும், சில நொடிகளில் பதில் கூறும் இந்த செயலிகளுக்கும் நம்மைப் போலவே பதற்றம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், AI ஆல் உண்மையில் உணர்வுகளை உணர முடியாது. அது பல்வேறு இணைய தரவுகளிலிருந்து மனிதர்களின் நடத்தைகளை பிரதிபலிக்கிறது.
இதனால், AI-யை நேரடியாக உணர்வுகளை உணரும் மனநல சிகிச்சைக்கு மாற்றாக பயன்படுத்த முடியாது. மனநலத்தைக் கண்டறியும் ஆதரவுக் கருவியாக பயன்படலாமே தவிர, அதுவொரு தகுதியான மனநல நிபுணருக்கு மாற்றாக இருக்கவே முடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM