இரத்தினபுரி ஹப்புகஸ்தென்ன லோவர் வேவேல்கெட்டிய, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த உற்சவம் எதிர்வரும் 11 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து முத்தேர் பவணி எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு பரவக்காவடி அதற்கு அடுத்தநாளான 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
தேர் பவனியானது ஹரோ கோசம் முழங்க, மங்கள வாத்தியம், பேன்ட் வாத்திய இசை முழக்கத்துடன் அழகிய மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட முத்தேர் பவனியானது ஹபுகஸ்தென்ன லோவர் வேவெல்கெட்டிய அடியார்களுக்கு அருள்பாலித்து, மேல் வேவெல்கெட்டிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சென்று மேல் வேவெல்கெட்டிய வைத்தியசாலை, கரப்பந்தாட்ட மைதானம், கோடஸ் அடியார்களுக்கு அருள்பாலித்து, பனிய நுகேபொல சமகி மைதானம், இறப்பர் தொழிற்சாலை அடியார்களுக்கு அருள்பாலித்து தேயிலை தொழிற்சாலை வழியாக ஆலயத்தை வந்தடையும்.
மேலும் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை கிரியை கால நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
எனவே பக்த அடியார்கள் ஆசார சீலராக வருகைதந்து அம்பாளின் இஷ்ட சித்திகளை பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ அன்புடன் அழைப்பதாக ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேநேரம் அடியவர்கள் ஆலயத்திற்கு தேவையான பால், தயிர், பூக்கள், பூ மாலை, கற்பூரம், ஊதுபத்தி போன்றவற்றை தந்துதவுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதேநேரம் தீர்த்தோற்சவமானது எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறும் என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM