ஸ்ரீலங்கா வனிதாபிமான விருதுகளின் ஐந்தாம் கட்டம் ஆரம்பமாகிறது

28 Mar, 2025 | 10:55 AM
image

NDB வங்கி NewsFirst உடன் இணைந்து, இலங்கையின் மகளிரை அங்கீகரித்து வலுவூட்டுவதற்காக மேற்கொண்டு வரும் நாட்டின் முதன்மையான முயற்சியான ஸ்ரீலங்கா வனிதாபிமான விருதுகளின் ஐந்தாவது நிகழ்வினை ஆரம்பிக்கவுள்ளமை குறித்து பெருமையுடன் அறிவிக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில், ஸ்ரீலங்கா வனிதாபிமான விருதுகள் நிகழ்வானது பல்வேறு துறைகளில் இலங்கையைச் சேர்ந்த மகளிரின் விதிவிலக்கான சிறப்பான சாதனைகளை அங்கீகரித்து கொண்டாடி வருகிறது. 

அதன் இந்த ஐந்தாவது நிகழ்வில், நீண்ட கால சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் ஒரு உருமாறும் முன்முயற்சிக்கான அங்கீகாரத்திற்கான ஒரு தளமாக மாற்றமடையவுள்ளது. 

இந்த பரிணாமமானது ஒரு தொலைநோக்கு ஐந்தாண்டு நிலைத்தன்மை மாதிரியால் செயற்படுத்தப்படுகிறது, இது பெண் தொழில் முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்யவும் , நிதியியல் கல்வியறிவை மேம்படுத்தவும் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பாதைகளை உருவாக்கவும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்த ஐந்தாவது கட்ட நிகழ்வானது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஒரு விரிவாக்கப்பட்ட விருது அமைப்பைக் கொண்டிருக்கும். 

மாகாண மட்டத்தில், சிறிய தொழில் முயற்சியாளர்கள், வரவிருக்கும் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் டிஜிட்டல் தொழில் முயற்சியாளர்கள் (மேலதிகமான புதிய சேர்க்கை), அத்துடன் இளம் தலைவர், கலை மற்றும் இலக்கியம், கல்வி சேவைகள், சமூக சேவைகள் மற்றும் விளையாட்டு ஆகிய பிரிவுகள் அடங்கும். 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவானது வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைப் பெண்களின் பங்களிப்பை கௌரவிக்கும் அதேவேளை, பெருநிறுவனத் துறையும் பத்து விருதுகள் மூலம் அங்கீகரிக்கப்படும். 

மேலதிக பாராட்டுகளில் ஐந்து வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், மிகவும் பிரபலமான விருதுகள் மற்றும் மிகவும் பிரபலமான பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு அங்கீகாரம் ஆகியவை அடங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right