(எம்.மனோசித்ரா)
பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்க - இலங்கை ஒத்துழைப்பு எவ்வாறு இரு நாடுகளையும் பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும் ஆக்குகிறது என்பது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொழும்பில் வியாழக்கிழமை (27) அமெரிக்க தூதுவர் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் அதன் தவிசாளர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க தூதுவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் செய்துள்ள பதிவில், 'கட்சிகளுக்கு இடையிலான எமது ஈடுபாட்டின் ஒரு பகுதியாக, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரள மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஆகியோருடனான சந்திப்பு இடம்பெற்றது.
எமது இரு நாடுகளினதும் ஜனநாயகத்துக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்க - இலங்கை ஒத்துழைப்பு எவ்வாறு இரு நாடுகளையும் பாதுகாப்பானதாகவும், வலிமையானதாகவும், வளமானதாகவும் ஆக்குகிறது என்பதைப் பற்றி இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.' எனக் குறிப்பிட்டுள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM