88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தோற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியை

27 Mar, 2025 | 09:11 AM
image

1957ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் ஆசிரியையாக நியமனத்தை பெற்று ஓய்வுபெற்ற ஒருவர் கல்விப் பொதுத் தரபொ.த (சா/த) பரீட்சையில் தமிழ் மொழி பாடத்துக்கு தோற்றிய நிகழ்வு ஒன்று இடம் பெற்றுள்ளது.

இம் முறை, ஹொரண பிரதேசத்தில் ஓய்வுபெற்ற 88 வயது ஆசிரியை ஒருவர் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மொழி பாடத்திற்கு தோற்றியுள்ளார்.

அங்குரவாதொட, பிரபுத்தகம என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் 1937ஆம் ஆண்டு பிறந்தவர். ஆசிரியையாக இருந்து 30 வருடங்களுக்கு முன் ஓய்வு பெற்ற இவரின் பெயர் மிசலின் நோனா என்பதாகும்.

இவர் ஹொரண தக்சீலா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் தனது பேரன் பேத்திகளது வயதை ஒத்தவர்களுடன் அமர்ந்து  பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

இவர் எந்த ஒரு ஆசிரியரின் உதவியும் இன்றி சுயமாக புத்தகங்களைப் பார்த்து தமிழ் மொழியை கற்றுக் கொண்டுள்ளார். இவர் ஆசிரியராக முதல் நியமனத்தை கண்டி மாவட்டத்தில், மடுகல்ல பிரதேசத்தில் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். கல்விக்கும் கற்றலுக்கும்  வயதெல்லை கிடையாது என்றும் அவர் குறிபிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33
news-image

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்று...

2026-07-18 12:23:27
news-image

25 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கு...

2026-07-18 11:44:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை...

2026-07-18 11:07:56
news-image

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்வதில் CCWE வழங்கும்...

2026-07-18 11:09:56
news-image

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...

2026-07-18 10:00:56
news-image

உடலுக்குள் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து கடத்தி...

2026-07-18 09:44:20
news-image

அலவத்துகொடையில் மண் மேடு இடிந்து விழுந்து...

2026-07-18 08:43:27
news-image

இன்றைய வானிலை 

2026-07-18 06:33:05