சூரியக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த கிரகமான சனியை (saturn) சுற்றியுள்ள வளையங்கள் தற்போது பூமியின் பார்வையில் மறைந்திருப்பதாக In-the-Sky.org தெரிவித்துள்ளது.
சனி கிரகத்துக்கு அழகே அதன் வளையங்கள்தான். விஞ்ஞானிகளையும் வான ஆராய்ச்சியாளர்களையும் மனிதர்களையும் இன்று வரை ஆச்சரிய மிகுதியால் கவர்ந்திழுக்கும் சனி வளையங்கள் இல்லாமல், அந்த சனி கிரகத்தை பார்த்தால் எப்படியிருக்கும்?!
இந்த அறிவியல் ஆச்சரியங்கள் நிறைந்த காட்சியை 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் மனிதர்களால் பார்க்க முடிந்திருக்கிறது.
சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் வியாழனுக்கு அடுத்ததாக உள்ள மிகப் பெரிய கிரகமாக மட்டுமன்றி, சுற்றிலும் அதிசயிக்கத்தக்க வளையங்களை கொண்ட கிரகமாகவும் சனி விளங்குகிறது.
சனி கிரகத்துக்கு ஏழு தனித்துவமான வளையங்கள் உள்ளன.
பில்லியன் கணக்கான பனிக்கட்டி, பாறைத்துண்டுகள், தூசுகளாலான இந்த வளையங்களை பூமியிலிருந்து பார்க்கும்போது மனிதர்களின் கண்களுக்குப் புலப்படாதது போன்ற மாயக் காட்சியை தரக்கூடிய இந்த நிகழ்வு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்கிறது.
சனி பூமியுடன் தற்போது 26.7 டிகிரி கோணத்தில் சாய்ந்த அச்சில் சுழன்று வருவதால் அதன் வளையங்கள் நம் கண்களுக்கு தென்படாதது போலிருக்கும்.
பூமி சனியின் வளையத் தளத்தை கடக்கும்போது இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. "ring plane crossing" என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு 13 முதல் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சனி வளையங்கள் மறையும் இந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (23) இலங்கை நேரப்படி இரவு 9.34 மணிக்கு இடம்பெறத் தொடங்கியது.
சனியின் வளையங்கள் மனிதர்களின் கண்களுக்கு தென்படாததால் அவ்வளையங்கள் அழிந்துவிட்டன என்பது அர்த்தமல்ல. இது வெறும் மாயக் காட்சி மட்டுமே.
சனி வளையங்கள் பூமியின் பார்வையில் மறைந்திருக்கும் நிகழ்வு கிட்டத்தட்ட 2032 வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த நாட்களில் மத்திய - வடக்கு அட்ச ரேகைகளில் வசிப்பவர்களுக்கு, அதிகாலை வேளைகளில் சனி சூரியனுக்கு மிக அருகில் தோன்றும் எனவும் அதேவேளை மத்திய தெற்கு அட்சரேகைகளில் வசிப்பவர்களால் வளையங்கள் இல்லாமல் சனி கிரகத்தைப் பார்க்க முடியும் எனவும் Space.com தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM